செய்தி
காணி, பொலிஸ் அதிகாரத்தை பறித்த பின்பே வடக்கில் தேர்தல்! சம்பந்தன் எச்சரிக்கை!
[ திங்கட்கிழமை, 30 யூலை 2012, 06:48.52 AM GMT ]
கிழக்கு தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி பெற்றால் மாகாணசபைகளுக்குப் பகிரப்பட்ட காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மீளப்பெற்று மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டு வடக்குத் தேர்தலை நடத்தும் திட்டம் அரசாங்கத்திடம் இருப்பதாக விஷயமறிந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருமலை சிவன் கோவில் வீதியில் தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு அருகில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் திருமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் பங்குகொண்டு உரையாற்றிய போதே சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:

அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் திட்டம் ஒன்றை வைத்தே செயற்படுகின்றது. வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்குப் பின்னால் அரசாங்கம் திட்டம் ஒன்றை வைத்திருக்கலாம்.

மாகாண சபைகளுக்கு அதிகாரப்பகிர்வு தேவை என்பது குறித்து மீண்டும் ஒரு முறை மறுபரிசீலனை செய்யவிருப்பதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்திருக்கின்றது.

பெரும்பான்மை இனவாதிகள் அதிகாரப்பகிர்வு தேவையில்லை, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக்கூடாது எனக் குரல் எழுப்புகின்றார்கள்.

இந்த நிலையில் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் ஆளும் கட்சி நிர்வாகத்தைக் கைப்பற்றினால் மாகாண சபைகளுக்காக வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மீளப்பெற்று மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவந்து விட்டுத்தான் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில்தான் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை நாம் எதிர்கொள்கின்றோம்.

இவ்வாறு சம்பந்தன் தெரிவித்தார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-05-2013, 11:57.18 AM ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.
[ Tuesday, 21-05-2013, 11:23.41 AM ]
கிழக்கு மாகாணசபை அமர்வை சபையின் தவிசாளர் தன்னிச்சையாக பிற்போட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாகாணசபைக்கு முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
[ Tuesday, 21-05-2013, 10:43.26 AM ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொழும்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்.
[ Tuesday, 21-05-2013, 08:32.13 AM ]
சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருந்த இலங்கைத் தமிழர் தனது தாய், மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
[ Tuesday, 21-05-2013, 07:27.11 AM ]

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது எனவும் இதனை தான் ஒப்புக்கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.

[ Tuesday, 21-05-2013 08:41:32 GMT ]
சீன மீனவர்கள் 16 பேர் கடந்த வருடம் மே மாதம் 6ம் திகதி அன்று வடகொரியா மற்றும் சீன கடல் எல்லைக்கு அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தபொழுது கைது செய்யப்பட்டனர்.
[ Tuesday, 21-05-2013 05:13:45 GMT ]
தமிழ்நாட்டில் இரண்டாயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உள்ளது இந்திய மருத்துவர்கள் சங்கம்.
[ Tuesday, 21-05-2013 09:30:28 GMT ]
இந்திய அணியுடன் மோதும் போட்டி எப்போதுமே ஸ்பெஷலானது என்கிறார் பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ்.
[ Tuesday, 21-05-2013 06:51:17 GMT ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன.
[ Tuesday, 21-05-2013 08:28:53 GMT ]
விஜய்யின் தலைவா படமும், சூர்யாவின் சிங்கம்-2 படமும் ஒரே நாளில் வெளியாகி மோதப் போகின்றன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.