இலங்கையில் சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கு! 63 நாடுகளுக்கு அழைப்பு! 19 நாடுகள் இணக்கம்
'நிலையான சமாதானமும், ஸ்திரதன்மையும் என்ற தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, பங்களாதேஷ், பிரேஸில், சீனா, ஈரான், ஈராக், மலேசியா, மாலைதீவு, நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான், தாய்லாந்து, நெதர்லாந்து, புரூனை, கென்யா, சவூதி அரேபியா, உகண்டா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்துகொள்ள இணக்கம் வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி முதல் 12ம் திகதி வரையில் இந்த மாநாடு கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இராணுவ உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், வெளிநாட்டு பாதுகாப்பு நிபுணர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ளனர்.
இந்த மாநாட்டில் பிரதம உரையை இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது.