செய்தி
 Photo
கூட்டமைப்பினர் கொள்கைகளை வீசியெறிந்துவிட்டு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுகின்றார்கள்: வி. முரளிதரன்
[ சனிக்கிழமை, 21 யூலை 2012, 05:18.08 PM GMT ]

தங்களது அரசியல் அதிகாரங்களை புரிந்து கொள்ள முடியாதவர்கள் முதலமைச்சர்களாக வருகின்றபோது அது கடும் பாதிப்பாக வருவதற்கு வாய்ப்பிருப்பதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுபராஜ் இன் ஹோட்டலில், கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு குறைந்தது ஐந்து ஆசனங்களை பெறவேண்டும் என்பது எங்களது நோக்கமாக இருக்கின்றது.

அதனை மையப்படுத்தியே எங்கள் பிரசார திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். சிலவேளைகளில் ஆறு ஆசனங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது. அதுவும் மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

மக்கள் ஒருங்கிணைந்து வாக்களிப்பார்களால் எங்களுக்கு இந்த ஆறு ஆசனங்களையும் பெறும்வாய்ப்பிருக்கின்றது. குறிப்பாக தமிழ் மக்கள் இந்த விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் கணிணி பொறியியலாளராக இருந்து மாணவர்கள் உட்பட கல்விச் சமூகத்துக்கு சேவையாற்றிவரும் பிராவோ ஹன்டி, அதிபராக பல மாணவர்களின் வெளியேற்றத்துக்கு துணையாக நின்ற ருத்திரமலர் ஞானபாஸ்கரன், சகல மொழியாற்றலும் நீண்டகால அரசியல் தேர்ச்சிபெற்றவருமான இராஜன் மயில்வாகனம் ஆகியோரை இந்த தேர்தலில் களமிறக்கியுள்ளேன்.

சாதாரண நிலையில் உள்ள எவரையும் தெரிவு செய்யவில்லை. மக்களால் நன்கு மதிக்கப்பட்டவர்களையே தேர்வு செய்துள்ளேன். இவர்களை வெற்றி பெறவைக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. அம்மக்கள் தேவையுணர்ந்து தங்களது தேர்வுகளை தெரிவு செய்வார்கள் என்று நம்புகின்றேன்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரையில் அவர்கள் கடந்த மாகாணசபை தேர்தலில் போட்டியிடவில்லை. அவர்கள் அந்தவேளையில் வட கிழக்கு இணைகின்றபோதுதான் நாங்கள் மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்திருந்தனர்.

இன்று அவர்கள் அந்த கொள்கைகளை வீசியெறிந்துவிட்டு, தற்போது இந்த மாகாணசபை தேர்தலிலே போட்டியிடுகின்றார்கள். இதன் நோக்கம் என்ன. நிச்சயமாக அவர்களால் ஆட்சி அதிகாரத்துக்கு வரமுடியாது இது நன்கு அறியப்பட்ட விடயம்.

இருந்தபோதிலும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரித்து, தமிழ் மக்களுக்கு ஒரு தேசத் துரோகத்தை செய்யவே தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த தேர்தலில் குதிக்கின்றது.

அவர்கள் போட்டியிடாவிட்டால் தமிழ் மக்கள் அனைவரும் ஆளும்கட்சிக்கு வாக்களிப்பார்கள். தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடிய வாய்ப்பு நூற்றுக்கு நூறுவீதம் இருந்திருக்கும்.
முதலமைச்சர் நியமனத்தை பொறுத்தவரையில் தகுதியான முதலமைச்சர் ஒருவர் ஆட்சிக்கு வரவேண்டும். எமது மாகாணத்தை ஆளக்கூடிய முதலமைச்சராக வரவேண்டும் என்பதே எனது வேண்டுகோள் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பாளர் ருத்திரமலர் ஞானபாஸ்கரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் இராஜன் மயில்வாகனம், பிராவோ ஹன்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 09:41.53 AM ]
சட்டவிரோத திருமணம் ஒன்றுக்கு தயாரான இலங்கையர் ஒருவர் சைப்பிரஸ் நாட்டில் கைது செய்யப்டப்டுள்ளார்.
[ Saturday, 25-05-2013, 09:23.26 AM ]
யுவதியொருவரை தொடர்ச்சியாக மிரட்டி வல்லுறவுக்குட்படுத்தி வந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரொருவரை நாரஹெம்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[ Saturday, 25-05-2013, 08:50.24 AM ]
சூரியனை சுற்றியுள்ள கோள்களில் மூன்று கோள்கள் முக்கோண பாதையில் தற்போது சுற்றிவருவதை வானத்தில் பார்க்கலாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013, 07:25.26 AM ]

மட்டக்களப்பு- வாழைச்சேனையில் சாரணர் பயிற்சிக்குச் சென்ற மாணவன் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த ஆசிரியர்கள் மூவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

[ Saturday, 25-05-2013, 07:02.22 AM ]

ஊடகவியலாளர்கள் முயற்சித்திருந்தால் பௌத்த பிக்குவை ஆபத்திலிருந்து மீட்டிருக்கலாம் என ஊடக அமைச்சின் செயலாளர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

[ Saturday, 25-05-2013 08:17:59 GMT ]
துருக்கியில் மதுபானங்கள் விற்பனைக்கு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதோடு, தொலைக்காட்சிகளிலும் மதுபான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 03:43:16 GMT ]
அரக்கோணம் அருகே 4 மாத கைக்குழந்தையை கடத்தி ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற வழக்கில் அண்ணன், தாய்மாமா உள்ளிட்ட 3 பேரை பொலிசார் கைது செய்தனர்.
[ Saturday, 25-05-2013 07:50:44 GMT ]
சூதாட்ட புகாரில் கைதான கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தனது ஜெய்ப்பூர் தோழிக்கு பரிசளித்து இருந்த பிளாக்பெர்ரி இசட்10 செல்போனை அப்பெண்ணிடம் இருந்து ஏற்கனவே பொலிசார் பறிமுதல் செய்தனர்.
[ Saturday, 25-05-2013 07:23:06 GMT ]
தொலைத் தொடர்பாடல் வலையமைப்பின் மூன்றாம் தலைமுறை வலையமைப்பின் (3G) பயனாக அறிமுகப்படுத்தப்பட்ட வீடியோ அழைப்புக்கள் தற்போது உலகளாவிய ரீதியில் பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
[ Saturday, 25-05-2013 07:54:51 GMT ]
கொலவெறி இசையமைப்பாளர் அனிருத், ரஜினிகாந்த் சினிமா குறித்து கூறிய அறிவுரையால் குழப்பத்தில் காணப்படுகிறார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 24-05-2013 12:30:12 ]
'அப்பிள்' கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன். மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அதிசய மெஞ்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இதற்கு முன்னரும் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பலநூறு விஞ்ஞானிகளும் பல்வேறு மெஞ்ஞானிகளும் கூட இதே நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றிருக்கிறார்கள்.