செய்தி
டெசோ மாநாடு சென்னையில் நடாத்த தமிழக அரசு அனுமதி மறுப்பு! வேறு எங்காவது நடாத்தலாம்!
[ வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 08:36.56 AM GMT ]
இலங்கைத் தமிழர்களின் நலன் கோரி சென்னையில் நாளை மறுநாள் திமுக தலைமையில் நடக்க இருந்த டெசோ மாநாட்டுக்கு தமிழக அரசு திடீரென இன்று அனுமதி மறுத்துள்ளது.

இத்தகவலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தொடரப்பட்ட பொது நலன் மனு மீதான விசாரணை இன்று நடந்தபோது தமிழக அரசு இந்த பதிலை அளித்தது.

நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ. அன்பழகன் டெசோ மாநாட்டிற்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்து இருந்தார்.

எவ்வளவுபேர் வருவார்கள் என்று கேட்டபோது சுமார் 8,000 பேர் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் முரசொலி பத்திரிகையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் ஏராளமான வாகனங்கள் அங்கு வர வேண்டிய நிலைமை ஏற்படும்.

ராயப்பேட்டை மருத்துவமனைக்கு எதிரே உள்ள வைஎம்சி மைதானத்திற்கு அதிக அளவில் வாகனங்கள் வந்தால் போக்குவரத்து பாதிக்கப்படும். ஆகவே சென்னையில் மாநாட்டை நடத்துவதற்கு அனுமதி இல்லை என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தவிர தமிழகத்தில் வேறு எங்கு வேண்டுமானாலும் டெசோ மாநாட்டை நடத்திக் கொள்ளலாம் என்றார்.

இதையடுத்து டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து காவல்துறை முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 24-05-2013, 12:48.40 PM ]

இலங்கை அரசாங்கத்தின் அனுமதியைப் பெறாமல், திருகோணமலையில் அமெரிக்கன் நிலையத்தை அமைப்பதற்கு திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கத் தூதரகம் புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொண்ட விவகாரம், அரசாங்கத்திற்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

[ Friday, 24-05-2013, 12:30.12 PM ]
'அப்பிள்' கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன். மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அதிசய மெஞ்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இதற்கு முன்னரும் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பலநூறு விஞ்ஞானிகளும் பல்வேறு மெஞ்ஞானிகளும் கூட இதே நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றிருக்கிறார்கள்.
[ Friday, 24-05-2013, 12:14.11 PM ]
கிழக்கு மாகாணத்தில் இன்று ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கையில் வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் எங்களை அலட்சியப் போக்குடன் நடத்துகின்றது என அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
[ Friday, 24-05-2013, 12:08.25 PM ]
தங்காலை வீடொன்றில் இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவத்தில் ஒரு வயதும் நான்கு மாதமுமான குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
[ Friday, 24-05-2013, 12:05.07 PM ]

வரும் தேர்தலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி டெல்லியில் அமையும் என இந்திய கமியூனிஸ்ட் கட்சி மாநில செயலர் தா. பாண்டியன்  நம்பிக்கை வெளியிட்டார்.

[ Friday, 24-05-2013 11:13:27 GMT ]
உலகின் மூன்றாவது உயரமான சிகரம் கஞ்சன்ஜங்கா. கடந்த திங்கட்கிழமை 8,586 மீ உயரமுடைய இந்த சிகரத்துக்கு ஒரு மழையேற்ற குழுவினர் சென்றனர்.
[ Friday, 24-05-2013 06:31:17 GMT ]
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
[ Friday, 24-05-2013 05:20:54 GMT ]
சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட விண்டூ தாரா சிங் அருகில் டோனியின் மனைவி இருக்கும் புகைப்படங்கள் பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் வெளியாகி உள்ளன.
[ Friday, 24-05-2013 08:46:56 GMT ]
வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி தெரியாது.
[ Friday, 24-05-2013 13:33:12 GMT ]
கொலிவுட்டில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால் தற்போது, தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக காணப்படுகிறார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.