செய்தி
டில்ருக்சனது பூதவுடல் இன்று யாழ்ப்பாணத்தை சென்றடையும்! நாளை நல்லடக்கம்!
[ வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 01:03.27 AM GMT ]
வவுனியா சிறைச்சாலையில் தாக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் இருந்த நிலையில் மரணமடைந்த மரியதாஸ் டில்ருக்சனது (வயது 36)பூதவுடல் இன்று வெள்ளிக்கிழமை  அவரது சொந்த இடமான யாழ். பாஷையூரைச் சென்றடையவுள்ளது.

இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை அவரது சொந்த இடமான பாஷையூரில் நடைபெறவுள்ளது.

அதேவேளை அவரது படுகொலைக்கெதிரான எதிர்ப்பு போராட்டம் எதிர்வரும் புதன்கிழமை யாழ்.நகரில் இடம்பெறவுள்ளது.

முன்னதாக நீண்ட இழுபறிகளின் பின்னரே மரியதாஸ் டில்ருக்சனது பூதவுடல் நேற்று பிற்பகல் அவரது பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

டில்ருக்சனது பூதவுடலுடன் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் செல்கின்றனர்.

இந்தக் கட்சியினரின் பாதுகாப்புடன் நேற்றிரவே பூதவுடல் தாங்கிய வாகனம் கொழும்பிலிருந்து புறப்பட்டிருந்தது.

விடுதலைப்புலிகள் போராளியான அவர் தகவலொன்றின் அடிப்படையினில் 2009ம் ஆண்டின் பிற்பகுதியினில் குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்நாள் டில்ருக்சனின் தந்தையும் தாயும் ராகம வைத்தியசாலையில் உள்ள மகனைப் பார்வையிடுவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக மகர சிறைச்சாலைக்குச் சென்றபோதே அவர் உயிரிழந்த விடயம் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை வவுனியா சிறையில் நடந்த கொடூரமான தாக்குதல் காரணமாக கடந்த ஜூலை மாதம் 3ஆம் திகதி வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்த கணேஸ் நிமலரூபன் (வயது 28) என்ற கைதி மரணமும் தற்போது யாழ். பாஷையூரைச் சோ்ந்த மரியதாஸ் டில்ருக்சனும் உயிரிழந்துள்ளமையும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பைக் கேள்வி குறியாக்கியுள்ளதாக அரசியல் தலைவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அச்சம் வெளியிட்டுள்ளதுடன் தங்களது கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 22-05-2013, 04:43.04 AM ]

மட்டக்களப்பு- வாழைச்சேனை கல்குடா வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளார்.

[ Wednesday, 22-05-2013, 04:14.48 AM ]
வடமாகாணத்துக்கான தேர்தல் திட்டமிட்டவாறு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருக்கின்ற போதிலும் அதிகுறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
[ Wednesday, 22-05-2013, 03:56.03 AM ]
"தேசிய போர் வீரர்கள்' தினத்தை முன்னிட்டு இலங்கை அரசால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரையை வடக்கு மாகாண சபை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் வாங்க வேண்டும் என வற்புறுத்தி விற்பனை செய்யப்படுவதாக மாகாண ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
[ Wednesday, 22-05-2013, 03:53.43 AM ]
மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொப்பிக்கலை காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ உபகரணங்கள் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஐயவீர தெரிவித்தார்.
[ Wednesday, 22-05-2013, 03:34.29 AM ]
ஸ்ரீபெரும்புதூரில் வைத்து கொல்லப்படுவதற்கு முன்னதாகவே, மைசூரில் ஒரு கொலை முயற்சி நடந்ததாக, ராஜீவ் காந்தி படுகொலை குறித்து புதிய அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா.
[ Tuesday, 21-05-2013 18:09:36 GMT ]
மின்னல் வேகத்தில் பறக்கும் போல்ட் என்னும் பெயருடைய ஒரு புறா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது.
[ Wednesday, 22-05-2013 02:17:22 GMT ]
வீதியில் சென்று கொண்டிருந்த மக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக தமிழ் திரைப்பட துணை நடிகர் கைது செய்யப்பட்டார்.
[ Tuesday, 21-05-2013 18:25:02 GMT ]
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொண்டு 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Wednesday, 22-05-2013 02:52:32 GMT ]
இணையப்பாவனையில் உலாவிகளின் பங்கு அளப்பரியதாகும். இவ்வாறான உலாவிகளில் முன்னணியில் திகழும் உலாவிகளுள் ஒன்றான Opera தற்போது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் சாதனங்களுக்காக Opera Webkit எனும் பெயரில் அறிமுகமாகவிருக்கின்றது.
[ Wednesday, 22-05-2013 02:47:31 GMT ]
நயன்தாராவுடன் காதல், தனுசுடன் மோதல், சக நடிகர்கள் பற்றி தன் படங்களில் வசனம் வைத்து கேலி செய்தல் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டவர் சிம்பு.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.