டெசோ மாநாட்டின் தலைப்பிலிருந்து “ஈழம்” என்ற சொல்லை அகற்றினால் மட்டுமே இந்திய அமைச்சின் அனுமதி கிடைக்கும்
ஆனாலும் அரசியல் ரீதியாக பார்க்கையில், மேற்படி மாநாட்டை வெளிநாட்டு பிரதிநிதிகளை அழைத்து நடத்துவதில் இந்திய அரசுக்கு ஆட்சேபனை எதுவுமில்லை.
இவ்வாறு அரசாங்கத்தின் சார்பாக, இந்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிரதிச் செயலாளர் திரு ஆர். கே. நாக்பால் என்பவர் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள கடிதமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் ரீதியான அங்கீகாரம் என்ற தலைப்பில் மேற்படி கடிதம் டெசோ அமைப்பின் செயலாளர் ஹசன் மொகமெட் ஜின்னாவின் பெயருக்கு கலைஞரின் அண்ணா அறிவாலயம் என்னும் விலாசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேற்படி கடிதம் 9ம் திகதியில் அனுப்பப்பட்ட படியால் மேற்படி மாநாட்டை நடத்துவதில் கலைஞர் கருணாநிதியும் என்னென்ன சவால்களை எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
