செய்தி
 Photo
சிங்கள அரசின் தமிழின அழிப்பை அம்பலமாக்க உதவிய இலண்டன் ஒலிம்பிக் நிகழ்வு
[ வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2012, 12:47.49 PM GMT ]
லண்டனில் யூலை 22 ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 12ம் திகதிவரை இடம்பெற்ற ஒலிம்பிக் நிகழ்வு ஈழத்தில் தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொடூர இனவழிப்பை அனைத்துலக மட்டத்தில் மீண்டுமொருமுறை அம்பலப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (பிரித்தானியக்கிளை) யினரின் ஏற்பாட்டில் ஒலிம்பிக் காலகட்டப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஈழத்தில் இனவழிப்பை மேற்கொள்ளும் சிங்கள இனவாதத்தின் உண்மை முகத்தை வெளிக்கொணரும் ஒரு நடவடிக்கையாக பெரும் எடுப்பிலான துண்டுப்பிரசுர விநியோகமும் சிங்கள இனவாதத்திற்கெதிரான கையெழுத்து சேர்க்கும் நடவடிக்கையும் லண்டனில் பலபாகங்களில் நடாத்தப்பட்டது.

இலண்டன் ஒலிம்பிக் கிராமம், இலண்டன் HYDE PARK, OXFORD STREET, STRATFORD UNDERGROUND STATION மற்றும் ஒலிம்பிக்கிற்காக வருகை தந்த மக்கள் கூடும் இடங்களில் பரவலாகவும் தொடர்ச்சியாகவும் மனிதநேயன் சிவந்தன் அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் 22 நாட்களும் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

‘Sri Lanka! Stop Genocide of Tamils’, ‘Boycott Sri Lanka’ என்ற வசனங்களடங்கிய பதாகைகளை கழுத்தில் தொங்க விட்டவாறு தொண்டர்கள் இலண்டன் நகரவீதிகளில் பரவலாக வலம் வந்தனர்.

2009 மே மாதத்துடன் இலங்கையில் போர் முடிந்து அங்கு அமைதி நிலவுகின்றது என்ற கருத்து பலதரப்பட்ட வேற்று நாட்டு மக்களிடம் இருப்பதை அவர்களுடன் அளவளாவியபோது அறியக்கூடியதாக இருந்தது.

2009 மே யில் யுத்தம் முடிவடைந்ததாக சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து தமிழினத்திற்கெதிராக எவ்வாறான வகைகளில் இனவழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது பற்றிய விளக்கம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தொண்டர்களால் அவர்களுக்கு விளக்கமாக வழங்கப்பட்டது.

லண்டன் ஒலிம்பிக் நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து மக்கள் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனவழிப்பு நடவடிக்கை தொடர்பான விளக்கத்தை கொடுத்து தமிழர்கள் அவர்களுக்குரிய இறையாண்மையின் அடிப்படையில் மீண்டும் அவர்களுக்குரிய தேசத்தினை நிறுவ வேண்டியதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஒலிம்பிக் நிகழ்வு வழங்கியது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 19-05-2013, 06:31.49 PM ]
பிரதமர் கமரூன் அவர்களே இலங்கை செல்ல வேண்டாம், இலங்கையே இனப்படுகொலையை நிறுத்து என லண்டன் வீதிகளில் திரண்ட பல்லாயிரக் கணக்கான மக்கள் முழங்கினார்கள்.
[ Sunday, 19-05-2013, 05:47.19 PM ]
பட்டம் பதவிகளுக்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுத்து செயற்படமாட்டேன். அமைச்சுப் பதவிகளை தூக்கி எறியும் சந்தர்ப்பம் வந்தால் அதையும் செய்ய தவறமாட்டேன் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
[ Sunday, 19-05-2013, 04:27.36 PM ]
தமிழர் தேசத்தினை போரில் வெற்றி கொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, ஒரு இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது.
[ Sunday, 19-05-2013, 04:04.33 PM ]
ஏறாவூர், மைலம்பாவெளியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஏழரை மணியளவில் இவ்விபத்து நேரிட்டுள்ளது.
[ Sunday, 19-05-2013, 03:59.33 PM ]
கணினி உதவியுடன் போலி நாணய தாள்களை அச்சிடும் செயல்பாட்டில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[ Sunday, 19-05-2013 16:41:23 GMT ]
ஐ.நா. சபை செயலாளர் பான் கி-மூன் ரஷ்யாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.
[ Sunday, 19-05-2013 06:22:12 GMT ]
கல்லூரி மாணவரை கடத்தி, 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
[ Sunday, 19-05-2013 18:28:21 GMT ]
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 72வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Sunday, 19-05-2013 06:44:43 GMT ]
ஒன்லைன் மின் (eBooks) புத்தகங்களின் சங்கமமாகத் திகழும் Google Play Books சேவையானது தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.
[ Sunday, 19-05-2013 17:30:09 GMT ]
தமிழில் நடிப்பதை விட்டுவிட்டு நான் தெலுங்கு, இந்தியில் மட்டுமே கவனம் செலுத்துவதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்று கூறியுள்ளர் நடிகை ஸ்ருதிஹாசன்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 07:33:38 ]
மூன்று தசாப்தங்களாக நீண்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து இன்றோடு நான்கு ஆண்டுகளாகி விட்டன.