செய்தி
நாட்டில் சட்டம் இல்லை! அரசுடன் தொடர்புடைய கொலைகாரன் விடுவிக்கப்படுகிறான்! ஓய்வுபெற்ற நீதிபதி வராவெவ
[ வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012, 01:31.01 AM GMT ]
இலங்கையில் சட்டம் இல்லை. பொலிஸாரை மக்கள் நம்புவதில்லை. அரசாங்கத்துடன் தொடர்புள்ள கொலைகாரனோ, ரவுடியோ விடுவிக்கப்படுகின்றனர்' என ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.ரி.எம். வராவெவ கூறியுள்ளார்.

அனைத்து பிரஜைகளுக்கும் சட்டம் சமத்துவமாகுவதை உறுதிப்படுத்தும் அரசியல் இயக்கமொன்றுக்கு தலைமை தாங்குவதற்கு தான் தயார் என அவர் கூறியுள்ளார்.

கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற "அநீதிக்கு எதிரான தேசிய இயக்க"த்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தொடர்கையில், 

சட்டத்தின் ஆட்சி அருகி வருவதற்கு எதிராகவும், அமைதியான, சுதந்திரமான சமூகத்துக்காகவும், அனைத்து மனிதர்களும் சட்டத்தின் முன் சமமாக விளங்கும் சமூகத்தை உருவாக்குவதுமே எனது அரசியல் இலட்சியங்களாகும்.

இதற்காக எந்தவொரு அமைப்புக்கும் நான் தலைமை தாங்கி, இத்தகைய சமூகத்தை ஏற்படுத்துவேன் என அவர் கூறினார்.

சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் நீதியையும் நியாயத்தையும் எதிர்பார்க்கும் மக்கள், இன்றைய அரசியலில் பிரவேசிக்க முடியாது.

தற்போது ரவுடிகள், திருடர்கள், போதைப்பொருள் வியாபாரிகள் போன்றோரே தற்போது அரசியலில் பிரவேசிக்க முடியும் என அவர் கூறினார்.

18 ஆவது திருத்தச்சட்டத்தின் அமுலாக்கமானது சுதந்திரமான, சட்டத்திற்கு கட்டுப்பட்ட சமூகத்திற்கான மிகப்பெரிய தடங்கலாகும் என அவர் தெரிவித்தார்.

17 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களானவை ஜனாதிபதிக்கு இடையூறாகும். ஏனெனில், அவர்கள் தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றாற்போல் நாட்டை கட்டுப்படுத்த முடியாது.

ஆனால், 18 ஆவது திருத்தச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அரச வளங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை நிறுத்துவதற்கு உத்தரவிட தேர்தல்கள் ஆணையாளருக்கு அதிகாரம் இல்லை. அந்த உத்தரவும் ஜனாதிபதியினாலேயே பிறப்பிக்கப்படுகிறது.

எவ்வாறு தேர்தல் நடத்தப்பட வேண்டும், எவ்வாறு வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிடும் நிலை விரைவில் வரும் என அவர் கூறினார்.

நாட்டில் சட்டம் இல்லை. பொலிஸாரை மக்கள் நம்புவதில்லை. அரசாங்கத்துடன் தொடர்புள்ள கொலைகாரனோ ரவுடியோ விடுவிக்கப்படுகின்றனர் என அவர் கூறினார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-05-2013, 08:00.18 PM ]
அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான அரசியல் தீர்வொன்றையே தமிழ் மக்கள் மட்டுமன்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களும் எதிர்பார்த்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
[ Tuesday, 21-05-2013, 05:38.36 PM ]
மே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் யுத்தகளத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவேந்தும் நாளாகவே உணரப்படுவதாகவும், விடுதலைப்புலிகளை நினைவு கூர்ந்ததாக கூறப்படுவதில் எந்தவொரு உண்மையும் இல்லையெனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
[ Tuesday, 21-05-2013, 04:21.00 PM ]
புனர்வாழ்வு பெற்றுவருகின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எஞ்சியுள்ள 340 முன்னாள் போராளிகளையும் இந்த வருட இறுதிக்குள் விடுவிக்க எதிர்பார்க்கப்படுவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு குறிப்பிடுகின்றது.
[ Tuesday, 21-05-2013, 04:09.15 PM ]

இலங்கையில் இவ்வருடத்தின் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான காலத்தில் 34 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

[ Tuesday, 21-05-2013, 02:57.53 PM ]

அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டம் கிடையாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 21-05-2013 18:09:36 GMT ]
மின்னல் வேகத்தில் பறக்கும் போல்ட் என்னும் பெயருடைய ஒரு புறா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது.
[ Tuesday, 21-05-2013 12:20:54 GMT ]
தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது.
[ Tuesday, 21-05-2013 18:25:02 GMT ]
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொண்டு 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Tuesday, 21-05-2013 06:51:17 GMT ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன.
[ Tuesday, 21-05-2013 18:36:02 GMT ]
புதுடெல்லியின் ஸ்பிரிங் டேல்ஸ் என்ற பள்ளியில் ஐந்தாம் வகுப்பினருக்கான சுற்றுச்சூழல் பாடத்திட்டத்தில், நடிகையும், பாடகியும், முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கையையொத்த பாடம் இடம்பெற்றுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.