செய்தி
 Photo
ஜனாதிபதியின் தலைமையில் வவுனியாவில் இடம்பெற்ற வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்!
[ வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012, 12:05.29 PM GMT ]
ஜனாதிபதியின் வருகையுடன் இடம்பெற்ற வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மக்கள் பற்றியோ, மக்களுடைய பிரச்சினைகள் பற்றியோ எடுத்துரைக்க ஆளில்லாத நிலையில் அதிகாரிகளின் அபிவிருத்தி பேச்சுக்களுடன் கூட்டம் நிறைவடைந்துள்ளது.

வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது,

இதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமை தாங்க அமைச்சர்கள் பெருமளவில் கலந்துகொண்டிருந்தனர்.

எனினும் இவ்விரு மாவட்டங்களிலுமுள்ள மக்களுடைய பிரச்சினைகள் குறித்து எந்த விடயங்களும் பேசப்படவில்லை. பேசப்பட்ட ஒரு சில விடயங்களும் மூடி மறைக்கப்பட்ட நிலையில் வீதிகளின் புனரமைப்புக் குறித்தும், மீள்குடியேற்றம் குறித்தும் பேசப்பட்டது.

ஆனால் மன்னாரிலுள்ள நீதிமன்ற விவகாரம், மற்றும் சன்னார் கிராமத்திலிருந்து மக்கள் துரத்தப்பட்ட விவகாரம் குறித்து எந்த விடயமும் பேசப்படவில்லை.

மேலும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள பகுதியில் மக்களிற்கான அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் எந்த விடயமும் பேசப்படவில்லை.

இந்நிலையில் புனரமைக்கப்பட்ட வீதிகள் குறித்தும், மீள்குடியேற்றப்பட்டு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட ஒருசில இடங்கள் குறித்தும் மட்டும் பேசி பெருமைப்பட்டுக் கொண்டு கூட்டம் நிறைவடைந்தது.






Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 12:00.24 AM ]
சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற மேலும் 16 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அந்நாட்டு அரசாங்கத்தினால் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
[ Friday, 24-05-2013, 11:59.14 PM ]
மாடு வெட்டுவதை கண்டித்து இன்று கண்டி தலதா மாளிகைக்கு அருகில் புத்த பிக்கு ஒருவர் தீக்குளித்ததாக தினக்கதிரில் செய்தி வெளியானதை பார்த்த நேயர் ஒருவர் இந்த படத்தையும் அனுப்பி வைத்ததுடன் ஏன் சிங்களவர்கள் மாடு வெட்டுவதில்லையா என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார்.
[ Friday, 24-05-2013, 11:49.56 PM ]
வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திலுள்ள வேப்பமரம் ஒன்றில் இருந்து அதிசயிக்கத்தக்க வகையில் நேற்று மாலையில் இருந்து பால் வடிகின்றது.
[ Friday, 24-05-2013, 10:17.51 PM ]
’’கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டு பேசியதை இந்து முன்னணித் தலைவர் ராம. கோபாலன் கண்டனம் செய்துள்ளார்.
[ Friday, 24-05-2013, 09:14.25 PM ]
நாளை சுவிஸில் தமிழ் பெண்களின் அழகுராணி போட்டி நடைபெறவுள்ளது. இதில் பல சுவிஸ் நாட்டு தமிழ் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
[ Friday, 24-05-2013 19:34:02 GMT ]
அபுதாபியின் மலைப்பிரதேசமான அல்- பாயாவின் பாலைவனப் பகுதியில் சிக்கிக்கொண்ட இரண்டு சுற்றுலாப் பயணிகளை, துபாய் காவல்துறையின் விமானப்பிரிவு காப்பாற்றியது.
[ Friday, 24-05-2013 10:45:18 GMT ]
முறைகேடுகளை தடுக்க ராணுவ தளவாடங்கள் கொள்முதலை வெளிப்படையாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
[ Friday, 24-05-2013 19:54:44 GMT ]
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர்-2 சுற்றில் மும்பை இண்டியன்ஸ் அணி, ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை எதிர்கொண்டு 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Friday, 24-05-2013 08:46:56 GMT ]
வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி தெரியாது.
[ Friday, 24-05-2013 13:33:12 GMT ]
கொலிவுட்டில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால் தற்போது, தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக காணப்படுகிறார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.