செய்தி
பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலாளர் நாளை இலங்கை விஜயம்
[ திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 01:46.17 PM GMT ]
பாகிஸ்தானுக்கான பாதுகாப்பு செயலாளர் லெப்டினண்ட் ஜென்ரல் ஆசீப் யாசின் மலிக், ஐந்து நாள் உத்தியோகபூர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு விடயங்கள் குறித்து, இலங்கை அதிகாரிகளுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்துள்ள 'சமாதானமும் அதன் நிலைப்பாடும்" என்ற தொனிப் பொருளில் இடம்பெறவுள்ள மாநாட்டிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

பாகிஸ்தானிய பாதுகாப்பு செயலாளருடன், பாகிஸ்தானிய உயர் மட்ட இராணுவ அதிகாரிகளும் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

இந்த பாதுகாப்பு மாநாட்டில், பாகிஸ்தானில் இராணுவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் இரண்டு நிறுவனங்கள், தமது உபகரணங்களினை கண்காட்சிப் படுத்தவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் முப்படைகளைச் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி வழங்குவது குறித்து,பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையே சிறந்த ஒத்துழைப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

எந்தவொரு முக்கியமான தருணங்களிலும் இலங்கையும், பாகிஸ்தானும் தமக்கிடையில் தொன்று தொட்டு பரஸ்பரம் உதவிகளை புரிந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த யுத்த காலத்திலும் பாகிஸ்தான் ஆயுதங்களை வழங்கி உதவியிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 19-05-2013, 03:07.36 AM ]
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு தொடர்பில் பிரசாரங்களை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது
[ Sunday, 19-05-2013, 02:55.42 AM ]
கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.லக்சிறி விஜியசிங்க தெரிவித்தார்.
[ Sunday, 19-05-2013, 02:52.38 AM ]
வடக்கு தேர்தலுக்கு எதிராக பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Sunday, 19-05-2013, 02:48.36 AM ]

ஆளும் கட்சியின் தேர்தல் பொறுப்புக்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

[ Sunday, 19-05-2013, 02:42.42 AM ]

இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இணக்கம் ஒன்றை எட்டும் முகமாக தமிழ்க் கட்சிகள் மத்தியில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றி பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

[ Sunday, 19-05-2013 02:36:10 GMT ]
கடந்த பிப்ரவரி மாதம் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியமையால், கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது.
[ Saturday, 18-05-2013 11:16:26 GMT ]
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உறவினர்கள் கடந்த ஆண்டு இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
[ Sunday, 19-05-2013 02:08:44 GMT ]
பெங்களூரில் நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
[ Saturday, 18-05-2013 07:17:24 GMT ]
முன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Lenovo ஆனது IdeaPad Yoga 11S எனும் புத்தம் புதிய ஹைப்பிட் மடிக்கணனியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
[ Saturday, 18-05-2013 17:02:32 GMT ]
நடிகர் விஷால் தற்போது சொந்த பட நிறுவனம் தொடங்கி ‘பாண்டிய நாடு‘ என்ற படத்தை தயாரிப்பதுடன் ஹீரோவாக நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியது:
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 18-05-2013 12:50:43 ] []
முள்ளிவாய்க்கால் படுகொலை முணுமுணுக்காத வாய்களே இருக்க முடியாது. தமிழர் தாயகமெங்கும் குருதியால் வரையப்பட்ட காவியம் என்று சொன்னால் மிகையாகாது.