அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஐந்து நாள் விடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கையைச் சேர்ந்த குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தபோது,எதிரே வந்த மற்றொரு வாகனம் மோதியதால் தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஜயந்த நீல் வியரத்ன(49), நிலீஷா நிமானி(16) ஆகியோரே கொல்லப்பட்டுள்ளனர்.
இறந்த பெண்ணின் தாயார் படுகாயத்துடன் மீட்கப்பட்டு, சன்னிபுரூக் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்திற்கு காரணமான எதிரே வந்த வாகன சாரதி கைது செய்யப்பட்டார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.


