நேற்று மாலை 4..30 மணியளவில் நற்பட்டிமுனை 10ம் வட்டாரம் விபுலானந்த வீதியில் உள்ள ஆசிரியை ஒருவரின் வீட்டிற்கு ஆங்கிலம் கற்பதற்காக குறித்த சிறுமி சென்றுள்ளார்.
இந்நிலையில், ஆசிரியரின் கணவர் சிறுமியை துஸ்பிரயோகம் புரிந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளதையடுத்து, பெற்றோர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டைத் தொடர்ந்து, குறித்த முதியவரை கைது செய்து,இன்று கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்துடன் இது தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.