செய்தி
கைதான 37 சீன மீனவர்களும் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 04:04.13 PM GMT ]
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்த 37 சீன மீனவர்கள் அந்நாட்டு தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சீன அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதை இலங்கை கடற்படையின் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய பிபிசியின் சந்தேஷியவிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஞாயிறன்று இரவு மட்டக்களப்பு கடற்பிராந்தியத்தை அண்மித்த பகுதியில் இரண்டு இழுவைப் படகுகள் மூலம் சட்டவிரோதமான முறையில் மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 37 சீனமீனவர்கள் மற்றும் இரண்டு இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இவர்கள் திருகோணமலை துறைமுகப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டனர்.

இந்தப் படகுகளுக்கு இலங்கை மீன்பிடித்துறை அமைச்சால் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் கூட இலங்கைக் கடற்பரப்பில் 200 கடல்மைல்களுக்கு அப்பால் இவாகள் மீன்பிடிப்பதற்கே அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும் இவர்களோ வழங்கப்பட்ட அனுமதியையும் மீறி பத்து அல்லது பதினைந்து கடல் மைல் பிரதேசத்துக்குள்ளேயே மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக இவர்களை விடுவிக்குமாறு இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் கோரிக்கை விடுத்தது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 22-05-2013, 02:54.30 AM ]
மாத்தளையில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் அச்சம் வெளியிட்டுள்ளது.
[ Wednesday, 22-05-2013, 02:52.31 AM ]

யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான இராணுவத்தளங்கள் அனைத்தும், பலாலி இராணுவ தளத்துக்கு மாற்றப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[ Wednesday, 22-05-2013, 02:50.23 AM ]
ஐக்கிய நாடுகள் ஜெனீவாவுக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதி தாமரா கருணாநாயகம் மீண்டும் ஒருமுறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் அரசாங்கங்களுக்கு இடையிலான அபிவிருத்தி குழுj; தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 22-05-2013, 02:46.42 AM ]

இசட் புள்ளி சர்ச்சைகளுக்கு முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவே பொறுப்பு சொல்ல வேண்டுமென கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

[ Wednesday, 22-05-2013, 02:13.59 AM ]

எதிர்வரும் 6 மாத காலத்துக்குள் புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்த யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 21-05-2013 18:09:36 GMT ]
மின்னல் வேகத்தில் பறக்கும் போல்ட் என்னும் பெயருடைய ஒரு புறா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது.
[ Wednesday, 22-05-2013 02:17:22 GMT ]
வீதியில் சென்று கொண்டிருந்த மக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக தமிழ் திரைப்பட துணை நடிகர் கைது செய்யப்பட்டார்.
[ Tuesday, 21-05-2013 18:25:02 GMT ]
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொண்டு 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Tuesday, 21-05-2013 06:51:17 GMT ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன.
[ Wednesday, 22-05-2013 02:47:31 GMT ]
நயன்தாராவுடன் காதல், தனுசுடன் மோதல், சக நடிகர்கள் பற்றி தன் படங்களில் வசனம் வைத்து கேலி செய்தல் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டவர் சிம்பு.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.