செய்தி
13ம் திருத்தச் சட்டமே வடக்கு இளைஞர்கள் ஆயுதங்களை கீழே வைக்கக் காரணம்: டியூ.குணசேகர (செய்தித் துளிகள்)
[ வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012, 02:11.44 AM GMT ]
13ம் திருத்தச் சட்டம் காரணமாகவே வடக்கு- கிழக்கு இளைஞர்கள் ஆயுதங்களை கீழே வைத்தனர் என அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.

 

ஆயுதங்களை ஏந்திய வடக்கு இளைஞர் யுவதிகள் ஆயுதங்களை களைந்து ஜனநாயக அரசியலில் இணைந்து கொண்டனர். 13ம் திருத்தச் சட்டத்தின் காரணமாகவே இது சாத்தியமானது.

13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரும் பலருக்கு இது நினைவில்லை. 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படுவதன் மூலம் மீண்டும் பிரிவினைவாதம் தலைதூக்கக் கூடும்.

13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கையினால் தமிழ் புலம்பெயர் மக்களும், புலி ஆதரவாளர்களுமே அதிகளவில் சந்தோசப்படுவார்கள். பிரபாகரனின் போரை நியாயப்படுத்தும் வகையில் எவரும் செயற்படக் கூடாது.

இந்த நிலைமைகளை புரிந்து கொள்ளாமல் ஒரு சிலர் செயற்படுகின்றமை வருந்தத்தக்கது என டியூ. குணசேகர தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்றுக்க அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்கள் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்ள முடியும் - அருன்திக பெர்னான்டோ

13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்கள் அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்ல முடியும் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அருன்திக பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்திற்க விரோதமான ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நபர்கள் விலகிக்கொள்ள வேண்டும்.

ஆளும் கட்சியின் சிலர் எதிர்க்கட்சிகளுக்கு கோசம் எழுப்ப ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இந்தியாவும் தொடர்புபட்டுள்ள இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கத்திற்கு பிணக்குகள் கிடையாது. எவ்வளவு பலம்பொருந்தியவர்கள் என்றாலும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு மாறுபட்ட கருத்துக்களை வெளியிடக் கூடாது என அருன்திக்க பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

காப்புறுதி பிணைப்பணம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 18-05-2013, 12:50.43 PM ]
“முள்ளிவாய்க்கால் படுகொலை” முணுமுணுக்காத வாய்களே இருக்க முடியாது. தமிழர் தாயகமெங்கும் குருதியால் வரையப்பட்ட காவியம் என்று சொன்னால் மிகையாகாது.
[ Saturday, 18-05-2013, 11:55.41 AM ]
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[ Saturday, 18-05-2013, 10:55.26 AM ]
பொலிஸ் தடை விதித்தாலும் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
[ Saturday, 18-05-2013, 10:27.47 AM ]
இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ஆண்டு நினைவு தினமும் ஆத்ம சாந்திப் பிராத்தனைக் கூட்டமும் இன்றுகாலை 10 மணிக்கு வவுனியா கலாசார மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
[ Saturday, 18-05-2013, 10:25.18 AM ]
சட்டத்துக்கு முரணான வகையில் வியட்நாமிற்கு சிங்கி இறால்களை கடத்திச் செல்ல முயன்ற இருவரை  சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.
[ Saturday, 18-05-2013 11:06:30 GMT ]
சிரியாவிலிருந்து துருக்கிக்கு கடத்திக் ‌கொண்டு வரப்பட்ட எரிபொருள் ஏற்றி வந்த கண்டெய்னர் வெடித்ததில் 10 பேர் பலியானதாக ஹட்டே கவர்னர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
[ Saturday, 18-05-2013 11:16:26 GMT ]
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உறவினர்கள் கடந்த ஆண்டு இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
[ Saturday, 18-05-2013 11:42:53 GMT ]
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட்பிக்சிங் முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர்களான ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
[ Saturday, 18-05-2013 07:17:24 GMT ]
முன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Lenovo ஆனது IdeaPad Yoga 11S எனும் புத்தம் புதிய ஹைப்பிட் மடிக்கணனியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
[ Saturday, 18-05-2013 08:38:26 GMT ]
ஸ்ரீ வள்ளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக கே. குருநாதன், பி. ஏலப்பன், எம். தர்மராஜன், பாலகிருஷ்ணன். கே ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ரம்மி” என்று பெயரிட்டுள்ளனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 17-05-2013 16:12:03 ]
எல்லோருக்கும் வணக்கம். எனது ஆய்வுத்துறை சார்ந்து பார்வையாளனாக பேசுவதற்கான எந்த முன்குறிப்புக்களும் ஆயத்தங்களும் இல்லாமல் வந்த ஒருவன் தற்போது உங்கள் முன்னால் பேசுவதற்காக நிற்கிறேன். ஆனால் பேசுவதற்கு – உங்களிடம் பகிர்ந்து கொள்ள நிறைய விடயங்கள் என்னிடம் உள்ளன.