சாதாரண சட்டமொன்றை நிறைவேற்றுவதனைப் போன்று இந்தச் சட்டத்தையும் நிறைவேற்றவும். அவசர சட்டமாக நிறைவேற்றப் போனால் இல்லாத பிரச்சினைகள் ஏற்படும்.
சட்டத்தை ஏன் அவசரமாக நிறைவேற்றுகின்றார்கள் என மக்கள் கேள்வி எழுப்பக் கூடும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
திவிநெகும சட்டம் நிறைவேற்றுவது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்ட போது, உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்க குறித்த சட்டத்தை அவசரமாக அமுல்படுத்த வேண்டுமென கோரியிருந்தார்.
எனினும், இவ்வாறு அவசரமாக அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.