செய்தி
அமெரிக்கர்கள் உள்நாட்டு விடயங்களில் தலையிட்டால் சீனாவுடன் இணைந்து பதிலடி! தேசிய சுதந்திர முன்னணி
[ திங்கட்கிழமை, 21 சனவரி 2013, 09:13.50 AM GMT ]

அமெரிக்கர்களுக்கு இலங்கை வரத் தடையில்லை. ஆனால் உள்நாட்டு விடயங்களில் தலையிட்டு நெருக்கடிகளைக் கொடுக்கக்கூடாது. மீறிச் செயற்பட  முற்பட்'டால் சீனாவுடன் இணைந்து பதிலடி கொடுப்போம் என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

புலிகளின் இலக்குகளை இலங்கையில் நிறைவேற்ற அமெரிக்கா கடுமையாக சூழ்ச்சிகளை செய்து வருகின்றது. தொடர்ந்தும் அவ்வாறானதொரு சூழலை இலங்கையில் உருவாக்க இந்நாட்டு மக்கள் இடமளிக்கமாட்டார்கள் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து தேசிய சுதந்திரமுன்னணியின் பேச்சாளரும் முன்னாள பிரதியமைச்சருமான பியசிறி விஜேநாயக்க கூறுகையில்,

இலங்கையைச் சிதைப்பதே அமெரிக்காவின் திட்டம். இதற்கு இடமளிக்கப் போவதில்லை.

கடந்த பல வருட காலமாக விடுதலைப்புலிகளின் வலையமைப்புடன் இணைந்து இலங்கைக்கு எதிரான நடவடிக்கைளையே அமெரிக்கா தொடர்ந்தும் முன்னெடுத்தது. குறிப்பாக ஐநாவிலும் இலங்கையைத் தலைகுனிய வைக்கவே அமெரிக்கா செயற்பட்டது.

இனிமேலும் இலங்கையை அடிமைப்படுத்தவோ நெருக்கடிகளைக் கொடுக்க முற்பட்டாலோ கடும் நடவடிக்கைகளையே முன்னெடுப்போம்.

சீனாவுடன் இலங்கைக்கு நல்ல நட்புறவு உள்ளது.

எனவே அமெரிக்காவின் சவால்களை சீனாவுடன் இணைந்து இலங்கை முறியடிக்கும். அடுத்த வாரத்தில் இலங்கை வரவுள்ள மூன்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர்களும் உள்நாட்டு விடயங்களில் தலையிடக் கூடாது. மீறிச் செயற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 19-05-2013, 05:24.49 AM ]
13வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவொன்று ஒன்றிணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[ Sunday, 19-05-2013, 05:10.51 AM ]
பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் உடல் நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதால், விரைவில் தனது அரசியல் பயணத்தைத் தொடர்வார் என துமிந்தவின் தந்தையான லால் சில்வா தெரிவித்தார்.
[ Sunday, 19-05-2013, 04:27.47 AM ]
யாழ்ப்பாணம், பலாலி மற்றும் காங்கேசன்துறை பாதுகாப்பு வலயப்பகுதி விஸ்தரிக்கப்படக்கூடாது என்று இந்தியா இலங்கையிடம் கோரியதாக என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய கேட்டுள்ளார்.
[ Sunday, 19-05-2013, 03:40.16 AM ]
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வீடுகளை வழங்காது திட்ட மிட்ட குடியேற்றங்களை அநீதியான முறையில் ஊக்குவிப்பதை தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[ Sunday, 19-05-2013, 03:34.53 AM ]

மாகாணசபை தேர்தலின் போது வடக்கில் இராணுவ பிரசன்னம் குறித்து தேர்தல் கண்காணிப்பாளர்கள் தமது அச்சத்தை வெளியிட்டுள்ளனர்.

[ Sunday, 19-05-2013 02:36:10 GMT ]
கடந்த பிப்ரவரி மாதம் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியமையால், கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது.
[ Sunday, 19-05-2013 05:27:16 GMT ]
தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த தோழியை, கத்தியால் குத்திய மாணவியை பொலிசார் கைது செய்தனர்.
[ Sunday, 19-05-2013 02:08:44 GMT ]
பெங்களூரில் நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
[ Saturday, 18-05-2013 07:17:24 GMT ]
முன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Lenovo ஆனது IdeaPad Yoga 11S எனும் புத்தம் புதிய ஹைப்பிட் மடிக்கணனியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
[ Sunday, 19-05-2013 05:24:18 GMT ]
நயன்தாராவுக்கும், ஆர்யாவுக்கும் திருமணம் நடக்கப் போவதாக பத்திரிகை அலுவலகங்களுக்கு சில தினங்களுக்கு முன்பு திருமண அழைப்பிதழ் வந்தது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 18-05-2013 12:50:43 ] []
முள்ளிவாய்க்கால் படுகொலை முணுமுணுக்காத வாய்களே இருக்க முடியாது. தமிழர் தாயகமெங்கும் குருதியால் வரையப்பட்ட காவியம் என்று சொன்னால் மிகையாகாது.