செய்தி
(2ம் இணைப்பு)
 
இலங்கைக்கு விஜயம் செய்யும் திட்டம் உள்ளது!- நவநீதம்பிள்ளை
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 06:23.50 AM GMT ]
இலங்கைக்கு விஜயம்  மேற்கொள்ளும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலையை மதிப்பீடு செய்வதற்கு, ஜனவரி மாதம் அங்கு செல்லவுள்ளதாக முன்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.

ஜனவரி மாதம் முடிவடைவதற்கு இன்னமும் 12 நாட்களே உள்ள நிலையில், முன்னர் அறிவிக்கப்பட்டது போன்று, இலங்கைக்குச் செல்லும் திட்டம் உள்ளதா என்று இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளர் நேற்று நவநீதம்பிள்ளையிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு அவர், ஆம், இலங்கைக்கு செல்லும் திட்டம் உள்ளது என்று பதிலளித்துள்ளார். எனினும், அவர் தனது பயணம் எப்போது இடம்பெறவுள்ளது என்ற தகவலை வெளியிடவில்லை.

சட்ட முறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை, பதவியில் இருந்து விலக்கிய குற்றவியல் செயற்பாடு நாட்டின் சட்ட முறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சார்பான பேச்சாளர் ரூபட் கொல்வின் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயற்பாடானது, நாட்டின் நீதிமன்ற சுயாதீனத்தில் தலையிடும் செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, குற்றவியல் செயற்பாட்டின் போது, பிரதம நீதியரசருக்கு ஆதரவு வழங்கிய சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை காணக்கூடியதாக உள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சார்பான பேச்சாளர் ரூபட் கொல்வின் தெரிவித்துள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-05-2013, 08:00.18 PM ]
அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான அரசியல் தீர்வொன்றையே தமிழ் மக்கள் மட்டுமன்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களும் எதிர்பார்த்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
[ Tuesday, 21-05-2013, 05:38.36 PM ]
மே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் யுத்தகளத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவேந்தும் நாளாகவே உணரப்படுவதாகவும், விடுதலைப்புலிகளை நினைவு கூர்ந்ததாக கூறப்படுவதில் எந்தவொரு உண்மையும் இல்லையெனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
[ Tuesday, 21-05-2013, 04:21.00 PM ]
புனர்வாழ்வு பெற்றுவருகின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எஞ்சியுள்ள 340 முன்னாள் போராளிகளையும் இந்த வருட இறுதிக்குள் விடுவிக்க எதிர்பார்க்கப்படுவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு குறிப்பிடுகின்றது.
[ Tuesday, 21-05-2013, 04:09.15 PM ]

இலங்கையில் இவ்வருடத்தின் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான காலத்தில் 34 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

[ Tuesday, 21-05-2013, 02:57.53 PM ]

அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டம் கிடையாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 21-05-2013 18:09:36 GMT ]
மின்னல் வேகத்தில் பறக்கும் போல்ட் என்னும் பெயருடைய ஒரு புறா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது.
[ Tuesday, 21-05-2013 12:20:54 GMT ]
தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது.
[ Tuesday, 21-05-2013 18:25:02 GMT ]
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொண்டு 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Tuesday, 21-05-2013 06:51:17 GMT ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன.
[ Tuesday, 21-05-2013 18:36:02 GMT ]
புதுடெல்லியின் ஸ்பிரிங் டேல்ஸ் என்ற பள்ளியில் ஐந்தாம் வகுப்பினருக்கான சுற்றுச்சூழல் பாடத்திட்டத்தில், நடிகையும், பாடகியும், முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கையையொத்த பாடம் இடம்பெற்றுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.