செய்தி
விடுதலைப் புலிகள் உருவாகவோ, அவர்களின் நிகழ்வுகளை நடத்தவோ அனுமதிக்க முடியாது: இராணுவம்
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 02:29.18 PM GMT ]

விடுதலைப் புலிகள் உருவாகுவதற்கோ அல்லது அவர்களின் நிகழ்வுகளை நடத்துவதற்கோ இராணுவத்தினர் ஒரு போதும் இடமாளிக்கமாட்டார்கள். பொதுமக்களிடம் பிரச்சனைகளைத் தோற்றுவித்து கிளர்ச்சிகளை உருவாக்க சில அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றனர் என்று யாழ்.மாவட்ட 51வது படைப்பிரிவின் தளபதி சந்தன குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்று 512 வது படைப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சமூக நலத்திட்டங்கள் தொடர்பில் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

போருக்குப் பிந்திய காலத்தில் யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினர் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனை சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் விமர்சித்து வருகின்றன. இதனால் இராணுவத்தினர் என்ன செய்கின்றார்கள் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இராணுவத்தினர் பொதுமக்களுக்கு என்ன சேவையாற்றுகின்றார்கள் என்பதை அரச ஊழியர்களாகிய நீங்கள் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வடக்கில் இராணுவம் தேவையில்லை என்று பல்வேறு பல்வேறு தரப்பினர் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்கள் ஐரோப்பா நாடுகளில் இருந்து வருகின்ற பணத்தினைப் பெற்றுக்கொண்டு தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர் என்றார்.

அத்துடன் தற்போது இங்குள்ள மதகுருமார்களும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் இராணுவத்தினர் வடக்கில் அதிகமாக உள்ளனர்.

இராணுவம் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றே தெரிவிக்கின்றர். தற்போது இங்கு கடமையாற்றும் இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தியில் பெரும் பங்காற்றி வருகின்றனர்.

இங்குள்ள காலசாரத்திற்கு மாற்றப்பட்டவர்களாக கடமையாற்றி வருகின்றனர் என்று அவர் குறிப்பட்டார்.

இந்த விளக்க கலந்துரையாடலில் யாழ்ப்பாணம், நல்லூர், வேலணை, ஊர்காவற்துறை ஆகிய பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 11:36.02 AM ]
கொழும்பு ஜோன் டி சில்வா ஞாபகார்த்த மண்டபம் மற்றும் தேசிய கலா பவனம் என்பன, அவை அமைந்துள்ள இடங்களில் இருந்து அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை கலைஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
[ Wednesday, 19-06-2013, 11:19.18 AM ]
வடக்குத் தேர்தலுக்கு எதிராக கூக்குரல் போடும் சம்பிக்க, விமல், பொதுபல சேனா, ராவணா பலய மற்றும் ராவய போன்றோர் ஜனாதிபதியின் திட்டத்தையே முன்னெடுக்கின்றனர் என கொழும்பு மாநாகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார்.
[ Wednesday, 19-06-2013, 10:08.13 AM ]
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு, காதில் ஏற்பட்ட நோய்க்குச் சிகிச்சை பெறச் சென்ற குடும்பப் பெண் ஒருவரை வைத்தியசாலை டாக்டர் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
[ Wednesday, 19-06-2013, 10:08.06 AM ]
இந்திய மத்திய அரசின் கருத்துகள், இந்திய அரசு தலைவர்கள் வழங்கிய உறுதிப்பாடுகள் என மன்மோகன் சிங் சொன்னார், சோனியா சொன்னார் என கூட்டமைப்பு எம்பிக்கள் ஊடகங்கள் மூலமாக சொல்கின்றார்கள். கூட்டமைப்பு எம்பிக்களுடன் ஆளும் இந்திரா காங்கிரஸ் தலைவர், இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரது அழகான படங்களும் ஊடகங்கள் மூலமாக காட்டப்படுகின்றன.
[ Wednesday, 19-06-2013, 09:30.22 AM ]
தமிழ்த் தேசிய இனத்தின் மீது தொடர்ச்சியான இனவழிப்புப் போரை கட்டவிழ்த்து விட்டுள்ள சிங்கள இனவெறியாளர்களின் ஆட்சியரங்காகவுள்ள சிறிலங்காவினை புறக்கணிக்கக் கோரி, புலம்பெயர் தமிழீழ மாணவர்களினால் கடந்த 17ம் திகதி ஓவல் துடுப்பாட்ட மைதானம் முன்பாக ஒழுங்கு செய்யப்பட்ட அமைதி வழியான கவனயீர்ப்புப் போராட்டம் சிங்கள இனவெறியாளர்களின் காட்டுமிராண்டித்தனமான வன்முறைத் தாக்குதலுக்குள்ளானது.
[ Wednesday, 19-06-2013 10:48:27 GMT ]
தனிநபர்களின் தகவல் பரிமாற்றங்கள் தொடர்பாக ஆயிரக்கணக்கான நபர்களின் விபரங்களை அமெரிக்க கேட்டுள்ளதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 08:00:12 GMT ]
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலை ஐ.சி.சி துபாயில் வெளியிட்டது.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 10:14:55 GMT ]
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்பு நயன்தாராவின் மவுசு கூடிவிட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.