செய்தி
முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தினர் எச்சரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2012, 02:09.26 PM GMT ]
புனர்வாழ்வின் மூலம் சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள், நாட்டில் கிளர்ச்சிகளை ஏற்படுத்தும் குழுக்களுடன் இணைந்து செயற்பட்டால் மீண்டும் கைது செய்யப்படுவீர்கள் என இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் செயற்படும் பல குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக நாட்டின் ஸ்திரதன்மை சீர்குலைக்கப்படுகின்றது. எனவே அவ்வாறான குழுக்களுடன் முன்னாள் போராளிகள் இணைந்து செயற்பட்டால் அவர்கள் உடனே கைது செய்யப்படுவார்கள் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, முன்னாள் போராளிகள் அரசியலில் ஈடுபடுவதற்கு எவ்வித தடையும் கிடையாது எனவும் இவர்கள் சட்ட ரீதியான முறையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சந்தன ராஜகுரு தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ள முன்னாள்போராளிகள் குறித்து இராணுவத்தினர் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் முன்னாள் போராளிகள் ஜே.வி.பி கிளர்ச்சிக் குழுக்களுடன் இணைந்து செயப்படுவதாக நாம் இலங்கையர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உதுல் பிரேமலத்ன வெளியிட்ட கருத்துக்கே இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 19-05-2013, 04:27.47 AM ]
யாழ்ப்பாணம், பலாலி மற்றும் காங்கேசன்துறை பாதுகாப்பு வலயப்பகுதி விஸ்தரிக்கப்படக்கூடாது என்று இந்தியா இலங்கையிடம் கோரியதாக என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய கேட்டுள்ளார்.
[ Sunday, 19-05-2013, 03:40.16 AM ]
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வீடுகளை வழங்காது திட்ட மிட்ட குடியேற்றங்களை அநீதியான முறையில் ஊக்குவிப்பதை தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[ Sunday, 19-05-2013, 03:34.53 AM ]

மாகாணசபை தேர்தலின் போது வடக்கில் இராணுவ பிரசன்னம் குறித்து தேர்தல் கண்காணிப்பாளர்கள் தமது அச்சத்தை வெளியிட்டுள்ளனர்.

[ Sunday, 19-05-2013, 03:07.36 AM ]
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு தொடர்பில் பிரசாரங்களை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது
[ Sunday, 19-05-2013, 02:55.42 AM ]
கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.லக்சிறி விஜியசிங்க தெரிவித்தார்.
[ Sunday, 19-05-2013 02:36:10 GMT ]
கடந்த பிப்ரவரி மாதம் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியமையால், கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது.
[ Sunday, 19-05-2013 04:46:18 GMT ]
இந்தியாவிலேயே மிகவும் குறைவான எடையில் பிறந்த பெண் குழந்தையின் பெயர் லிம்கா என்ற சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
[ Sunday, 19-05-2013 02:08:44 GMT ]
பெங்களூரில் நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
[ Saturday, 18-05-2013 07:17:24 GMT ]
முன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Lenovo ஆனது IdeaPad Yoga 11S எனும் புத்தம் புதிய ஹைப்பிட் மடிக்கணனியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
[ Sunday, 19-05-2013 05:07:24 GMT ]
ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜப்பானில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 18-05-2013 12:50:43 ] []
முள்ளிவாய்க்கால் படுகொலை முணுமுணுக்காத வாய்களே இருக்க முடியாது. தமிழர் தாயகமெங்கும் குருதியால் வரையப்பட்ட காவியம் என்று சொன்னால் மிகையாகாது.