கனடாவில் தமிழீழவிடுதலைப்புலிகளின் இனப்படுகொலை என்ற தொணியுடன் முத்திரைகள் பயன்பாட்டில் உள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து இலங்கையின் வெளியுறவு அமைச்சு
தமது விளக்கத்தை கோரியிருந்தது.
கடிதம் மூலம் கோரப்பட்ட இ;ந்த விளக்கத்துக்கு கனேடிய அஞ்சல் கூட்டுத்தாபனத்துக்கு பொறுப்பான அமைச்சர் Denis Lebel மற்றும் அஞ்சல் கூட்டுத்தாபன தலைவர் Deepak Chopra ஆகியோர் பதிலளித்துள்ளனர்.
அதில், குறித்த முத்திரைகள் பயன்பாடு குறித்து விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கனேடிய அஞ்சல் கூட்டுத்தாபனத்தினால் குறித்த முத்திரைகள் வெளியிடப்படவில்லை.
அத்துடன் அவை போலியானவை என்றும் விளக்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கனேடிய இலங்கை உயர்ஸ்தானிகர் சித்திராங்கனி வாகீஸ்வரா தெரிவித்துள்ளார்