சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் கொரிய பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில் அமெரிக்கா தன்னுடைய இரண்டாவது போர்க் கப்பலான யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகனை கொரிய தீபகற்ப பகுதிக்கு அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள், ஜப்பான் கடலில் பராமரிப்பு மற்றும் கடலின் சோதனைகளை ஆராயந்த பின்னரே போர்க் கப்பல் கொரிய பகுதிக்கு அனுப்பப்பட்டது.
இங்கு போர் விமானங்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கும், போர் திறனை உறுதிப்படுத்தவும் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன், நீர் மூழ்கி போர்க்கப்பல் யு.எஸ்.எஸ். மிக்ஸிகன் ஆகியவை தென்கொரியாவில் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.