விவசாயியின் 3 மகள்கள், ஒரே நேரத்தில் நிர்வாக சேவை தேர்வில் வெற்றிபெற்று சாதனை!
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் விவசாயியின் 3 மகள்கள் ஒரே நேரத்தில் மாநில நிர்வாக சேவை தேர்வில் வெற்றிபெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் பொது சேவை ஆணையம் (RPSC) ராஜஸ்தான் நிர்வாக சேவை (RAS) 2018 தேர்வு இறுதி முடிவை நேற்று வெளியிட்டது.
இந்த தேர்வில் ராஜஸ்தானின் ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீ சஹ்தேவ் சஹாரனின் 3 மகள்கள் வெற்றி பெற்று உள்ளனர்.
ஸ்ரீ சஹ்தேவ் சஹாரனுக்கு 5 மகள்கள். அதில் ஏற்கனவே ரோமா மற்றும் மஞ்சு ஆகிய இருவரும் ராஜஸ்தான் நிர்வாக சேவை தேர்வில் வெற்றிபெற்று பணியில் உள்ளனர்.
தற்போது மற்ற அன்ஷு, ரீது மற்றும் சுமன் ஆகிய 3 மகள்களும் இதே தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அதாவது ராஜஸ்தான் நிர்வாக சேவை தேர்வில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரிகள் சாதனை படைத்துள்ளனர்.
They are five sisters. Other two Roma and Manju were already RAS.
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) July 15, 2021
All five daughters of farmer Shri Sahdev Saharan are now RAS officers.
இதனை இந்திய வன சேவை (IFS) அதிகாரி பர்வீன் கஸ்வான் (Parveen Kaswan) ட்வீட் செய்துள்ளார். அதில், "இது ஒரு நல்ல செய்தி. அன்ஷு, ரீது மற்றும் சுமன் ஆகியோர் ராஜஸ்தானின் ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த மூன்று சகோதரிகள். இன்று மூவரும் ஒன்றாக ஆர்.ஏ.எஸ். இல் தேர்வு செய்யப்பட்டனர். விவசாயி ஸ்ரீ சஹ்தேவ் சஹாரனின் மகள்கள் இப்போது ஆர்ஏஎஸ் அதிகாரிகள்" என்று ட்வீட் செய்துள்ளார்.
இந்த ட்வீட் 6,000-க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது மற்றும் பலர் இந்த சகோதரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.