இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியிலிருந்து இலங்கை நட்சத்திர துடுப்பாட்டகாரர் விலகல்? கசிந்த தகவல்
இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியலிருந்து இலங்கை துடுப்பாட்டகாரர் பானுக ராஜபக்ச விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொரை 2-1 என கைப்பற்றியது.
இதைதொடர்ந்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் மோதுகின்றன, இலங்கை-இந்தியா மோதும் முதல் டி-20 போட்டி கொழும்பு மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில், விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியிலிருந்து இலங்கை வீரர் பானுக ராஜபக்ச விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 3வது போட்டியில் பானுக ராஜபக்ச 65 ஓட்டங்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பானுக ராஜபக்சாவுக்கு பதிலாக Ashen Bandara இலங்கை அணியில் சேர்க்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும், முதல் டி-20 போட்டிக்கு முன் பானுக ராஜபக்ச மற்றும் வனிந்த ஹசரங்க உடற்தகுதி தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.