பிரித்தானியா எரிபொருள் பிரச்சினை: உதவிக்கு வரமாட்டோம்... கைவிரித்த வெளிநாட்டு ட்ரக் சாரதிகள்
பிரித்தானியா, கனரக வாகன சாரதிகள் பற்றாக்குறை காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு முதலான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், வெளிநாட்டு ட்ரக் சாரதிகளுக்கு தற்காலிக விசா வழங்கி அவர்களைக் கொண்டு பிரச்சினைகளை தீர்ப்பது என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டார்.
ஆனால், பிரித்தானியாவுக்கு உதவிக்கு வரமாட்டோம் என கைவிரித்துவிட்டார்கள் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த லொறி சாரதிகள்!
அதிக சம்பளம் கொடுப்பதாகவும், சிறப்பு விசா கொடுப்பதாகவும் வாக்களித்தும் யாரும் அதை செவிகளில் ஏற்றுக்கொள்ளவில்லை.
லொறி யூனியன் ஒன்றின் தலைவர், இது தன் தலையில் பிரித்தானியாவே வாரிப் போட்டுக்கொண்ட மண், அதனால் அதன் பலனை பிரித்தானியா அனுபவிக்கட்டும், நாங்கள் உதவிக்கு வரமாட்டோம் என்று கூறியுள்ளார்.
அத்துடன், பிரித்தானிய சாரதிகள் சார்பில் பேசிய சாரதி ஒருவர், தாங்கள் சமுதாயத்தில் குஷ்டரோகிகளை விட மோசமாக நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா காலகட்டத்திற்கும் பிரெக்சிட்டுக்கும் முன் ஏற்கனவே எங்கள் தொழில் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தது. பல சாரதிகள் வேலையை விட்டே போய்விட்டார்கள் என்கிறார் அவர்.
ஐரோப்பிய ஒன்றிய சாரதிகளோ, தாங்கள் செய்ததன் பலனை பிரித்தானியா அனுபவிக்கட்டும், நாங்கள் குறுகிய கால விசாவிலெல்லாம் பிரித்தானியாவுக்கு செல்லமாட்டோம் என்று கூறிவிட்டார்கள்.
போரிஸ் ஜான்சன் அடுத்து என்ன செய்யப்போகிறார் தெரியவில்லை!