பூமியில் இருந்து சுடப்பட்ட தோட்டா; 3000 அடி உயரத்தில் விமானத்தை துளைத்து பயணி காயம்!
63 பயணிகளை ஏற்றிச் சென்ற ATR-72 விமானம் 3,000 அடி உயரத்தில் சுடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயம்பட்ட இளைஞர் விமானம் தரையிறங்கியதும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மியான்மரில் தரையிலிருந்து இருந்து சுடப்பட்ட தோட்டா, நடுவானில் பார்த்துகொண்டிருந்த விமானத்தை தாக்கியதில் உள்ளே இருந்த பயணி ஒருவர் காயமடைந்தார்.
மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த அந்த நபர், கடந்த வெள்ளிக்கிழமை காலை மியான்மரின் லோய்காவில் தரையிறங்கவிருந்தபோது, இந்த சம்பவம் நடந்தது.
இன்ஸ்டாகிராமில் 'cabin_crew_club' மூலம் பகிரப்பட்ட ஒரு புகைப்படம், பாதிக்கப்பட்ட இளைஞர் தனது இருக்கையில் அமர்ந்து, சாய்ந்து, அவரது கழுத்து மற்றும் கன்னத்தில் டிஸ்ஸு பேப்பர்களை வைத்திருப்பதைக் காட்டுகிறது.
மற்றொரு படம், விமானத்தின் உடற்பகுதியில் புல்லட் பயந்து உள்ளே சென்ற துளையை காட்டுகிறது.
தகவல்களின்படி, 63 பயணிகளை ஏற்றிச் சென்ற ATR-72 விமானம் 3,000 அடி உயரத்தில் சுடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் இருந்த நபரின் முகத்தின் வலது பக்கத்தில் காயம் ஏற்பட்டது.
தரையிறங்கியதும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த நபர், நய்பிடாவிலிருந்து லொய்காவ் நோக்கி பயணித்த 27 வயதுடைய இளைஞர் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
கரேனி தேசிய முற்போக்குக் கட்சி (KNPP) மற்றும் மக்கள் பாதுகாப்புப் படை ஆகிய இரண்டு அரசு எதிர்ப்புப் படைகள் விமானம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மியான்மர் இராணுவ கவுன்சில் குற்றம் சாட்டியது. ஆனால், KNPP கூறப்படும் துப்பாக்கிச் சூட்டில் தங்கள் அமைப்புக்கு தொடர்பு இல்லை என்றும், பொதுமக்கள் இலக்குகளைத் தவிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், லோகாவ் செல்லும் விமானங்களுக்கான விமான முன்பதிவு மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மியான்மர் ராணுவமும் விமான நிலையம் அருகே ராணுவத்தை நிறுத்தியுள்ளதுடன், அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.