ராணியார் பின்பற்றி வந்த... நூற்றாண்டுகள் பழமையான மரபு: கைவிட முடிவு செய்த கமிலா
கமிலா, இதுவரை பக்கிங்ஹாம் அரண்மனை பின்பற்றிவந்த மரபுகளில் ஒன்றை கைவிட இருப்பதாக தகவல்
இரண்டாம் எலிசபெத் ராணியாருக்கு முதன்மை பணியாளர்கள் என 7 பேர்கள் இருந்துள்ளனர்.
காலமான பிரித்தானிய ராணியார் பின்பற்றி வந்த பழமையான மரபை மன்னர் சார்லஸின் மனைவி கமிலா கைவிட இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் புதிய மன்னராக சார்லஸ் முடிசூடவிருக்கிறார். இதற்கான விழா அடுத்த ஆண்டில் முன்னெடுக்கப்படும் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், மன்னர் சார்லஸின் மனைவி கமிலா, இதுவரை பக்கிங்ஹாம் அரண்மனை பின்பற்றிவந்த மரபுகளில் ஒன்றை கைவிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
@getty
அதாவது தமக்கான முதன்மை பணியாளர்கள் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள அவர் முடிவு செய்துள்ளாராம். இது மன்னர் சார்லஸ் முடிவு செய்துள்ள, குறைவான எண்ணிக்கையிலான பணியாளர்கள் என்ற திட்டத்தின் ஒருபகுதி என்றே கூறப்படுகிறது.
அத்துடன், தற்போது அவருக்கிருக்கும் பணியாளர்களே பக்கிங்ஹாம் அரண்மனையிலும் தொடர்வார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் எலிசபெத் ராணியாருக்கு முதன்மை பணியாளர்கள் என 7 பேர்கள் இருந்துள்ளனர். இவர்களில் சிலர் கடந்த 60 ஆண்டுகளாக பணியாற்றியும் வந்துள்ளனர்.
இவர்களே ராணியாருக்கான அனைத்து பணிகளையும் முன்னெடுப்பதுடன், பூக்கள் சேகரிப்பது தொடங்கி தனிப்பட்ட குடும்ப கூடுகைகள் வரையில் இவர்களே திட்டமிட்டு முன்னெடுப்பார்கள்.
@empics
மட்டுமின்றி, இவர்கள் அரண்மனையில் ராணியாருக்கான கண்ணும் காதுமாக செயல்படுவார்கள் என்றே கூறப்படுகிறது. தற்போது கமிலாவுக்கு அந்தவகையில் சிறப்பாக செயல்படும் இருவர் உடனிருப்பதாக தெரியவந்துள்ளது. சோஃபி டென்ஷாம் மற்றும் அவருக்கு உதவியாளராக, பெலிண்டா கிம் ஆகிய இருவர்.
இவர்களே பக்கிங்ஹாம் அரண்மனையிலும் பணியாற்றுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கமிலா வளமான மொழியறிவு பெற்றவர் என கூறப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் தமது நண்பர்கள், உறவினர்கள் மற்றுமாக 2,000 கடிதங்களை தொகுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது பக்கிங்ஹாம் அரண்மனையில் பணிகள் அதிகமிருக்கும் என்பதால், சில பணியாளர்களை தமது குழுவில் இணைத்துக்கொள்வார் என்றே நம்பப்படுகிறது.
@dannylawson