பிரித்தானியா 50 புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தினால்... சவால் விடும் கடத்தல்காரர்கள்
பிரித்தானியா 50 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தினால், நாங்கள் 500பேரை புதிதாக பிரித்தானியாவுக்குள் அனுப்புவோம் என கடத்தல்காரர்கள் சவால் விட்டுள்ளார்கள்.
ஒரே நாளில் 10 படகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோர்
கடந்த ஞாயிற்றுகிழமை ஒரே நாளில் 10 படகுகளில் 442 சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார்கள்.
அதிரவைக்கும் தகவல் என்னவென்றால், 2023இல் சுமார் 80,000 புலம்பெயர்ந்தோர் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையலாம் என உள்துறை அலுவலக அதிகாரிகள் கணித்துள்ளார்கள்.
Credit: Reuters
அதிகாரிகளுக்கு சவால் விடும் கடத்தல்காரர்கள்
பிரித்தானிய அதிகாரிகள் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த எந்த அளவுக்கு முயற்சி செய்கிறார்களோ, அதே அளவுக்கு கட்டுப்பாடுகளை மீறி புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்குள் அனுப்பியே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டதுபோல செயல்படுகிறார்கள் கடத்தல்காரர்கள்.
கடத்தல்காரர்கள் சமூக ஊடகங்களில் வெளியிடும் விளம்பரங்கள், பிரித்தானியா 50 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தினால், நாங்கள் 500பேரை புதிதாக பிரித்தானியாவுக்குள் அனுப்புவோம் என்று கூறுகின்றன.
யாரும் உங்களை பிரித்தானியாவிலிருந்து திருப்பி அனுப்பமுடியாது என்று அடித்துச்சொல்கிறது ஒரு விளம்பரம்.
ஆக, பிரித்தானிய பிரதமர் சட்ட விரோத புலம்பெயர்ந்தோரைத் தடுத்து நிறுத்துவதற்காக பிரான்சுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்தும், அதனால் எந்த பயனும் இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
Credit: The Mega Agency