சென்னை அணியிடம் சில வீக்பாய்ண்ட்கள் உள்ளது! கவனம் தேவை... எச்சரிக்கும் பிரையன் லாரா
மேற்கிந்திய தீவு அணியின் முன்னாள் வீரரான பிரையன் லாரா, சென்னை அணியில் சில பலவீனங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில், சென்னை அணி கடைசி பந்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 10 போட்டிகளில் 8 வெற்றி 2 தோல்வியுடன் முதல் இடத்தில் உள்ளது.
அதுமட்டுமின்றி பிளே ஆப் சுற்றையும் சென்னை அணி கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது என்று கூறலாம். நேற்றைய கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில், ஜடேஜாவின் திடீர் விஸ்வரூபமே வெற்றிக்கு காரணம், ஜடேஜா மட்டும் அப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை காட்டவில்லை என்றால் சென்னை அணியின் தோல்வி உறுதியாகியிருக்கும்.
இந்நிலையில், இந்த போட்டி முடிந்த பின்பு பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு மேற்கிந்திய தீவு அணியின் முன்னாள் வீரரான பிரையன் லாரா சென்னை அணியில் சில வீக்கான இடங்கள் உள்ளதாக எச்சரித்துள்ளார்.
என்னைப் பொறுத்தவரை சென்னை அணியில் இன்னும் சில வீக்கான இடங்கள் உள்ளதாக தான் நினைக்கிறேன், நான் அவர்களின் பெயர்களை வெளிப்படையாக கூற விரும்பவில்லை, இதனால் சென்னை அணி இனி வரும் போட்டிகளில் அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில் எதிரணியினர் மறுமுறை மோதும் போது, வாய்ப்பு கிடைத்தால், அதை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது.
தன்னை பொறுத்தவரை சென்னை அணி இந்தளவிற்கு வந்ததற்கு காரணமே டோனியின் கேப்டனிசிப்பை தான் கூறுவேன், டோனியின் பேட்டிங்கை மறைமுகமாக சாடிய லாரா, ருதுராஜ் கெய்க்வாட், டூ ப்ளெசிஸ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தை குறிப்பிட்டார்.
அதே சமயம் டுவைன் பிராவோ மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் பந்து வீச்சில் நன்றாக உள்ளனர். சென்னை அணிக்கு இன்னும் நான்கு ஆட்டங்கள் உள்ளது என்பதால், அணியின் பந்து வீச்சு எந்தளவிற்கு உள்ளது என்பதை பார்ப்போம் என்று கூறியுள்ளார்.