டோனிக்கு இரண்டாவது முறையாக ஓய்வு கொடுக்கும் திட்டம்! முன்னாள் வீரர் சொன்ன ஐடியா: பிசிசிஐ ஓகே சொல்லுமா?
இந்திய அணியின் முன்னாள் வீரரான டோனிக்கு இரண்டாவது முறையாக ஓய்வு கொடுக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணிக்கு மூன்றுவித கோப்பைகளை வாங்கிக் கொடுத்த இந்திய முன்னாள் வீரர் டோனி, திடீரென்று டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன் பின் ஒருநாள் போட்டி மற்றும் டி20 என சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
கிரிக்கெட் உலகில் இந்தியாவுக்கு பல வெற்றிகளை தேடித் தந்துள்ள டோனிக்கு மரியாதை அளிக்கும் வண்ணம் பிசிசிஐ கூடிய விரைவில் அவரது நம்பர் கொண்ட ஜெர்சியை ஓய்வுக்கு கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் சபா கரீம் தற்போது கூறியுள்ளார்.
மேலும் அவரைப்போலவே பல இந்திய முன்னாள் வீரர்களின் ஜெர்சிக்களை ஓய்வுக்கு கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து சிறந்த வீரர்களை டோனியால் வெளிக்கொண்டு வர முடியும், எனவே அவள் இந்திய கிரிக்கெட் கமிட்டி உடன் இணைந்து ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் சிறந்த வீரர்களை வெளிக்கொண்டுவந்து அவர்களது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்,