பிரான்சில் காணாமல் போன பிரித்தானிய பெண்! 8 மாதங்கள் கழித்து எலும்புக்கூடாக மீட்பு!
பிரான்சில் மலை அடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் பிரித்தானியாவைச் சேர்ந்த Esther Dingley எனும் மலையேறும் பெண்ணுடையது என்பது உறுதியாகியுள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்தவர் Esther Dingley. 37 வயதான இவர் மலையேறுவதை (Hiking) பொழுதுபோக்காக கொண்டவர். இவரது கணவர் Daniel Colegate, ஐவரும் ஒரு மலையேறுபவர்.
எஸ்தர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸ் - ஸ்பெயின் எல்லையில் உள்ள Puerto de la Galera எனும் இடத்தில் 8,796 அடி உயரம் உள்ள Pico Salvaguardia எனும் பிரபலமான மலையேறும் SummitPost-க்கு தனியாக சென்றுள்ளார்.
அங்கு சென்றவர், பிறகு எங்கு சென்றார், என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அவரது குடும்பத்தினர் அவரை காணவில்லை என புகார் அளித்தனர்.
பின்பு நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கடைசியாக நவம்பர் 22-ஆம் திகதி அங்கு வந்த மற்ற மலையேறும் வீரர்களால் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த வாரம் Pico Salvaguardia மலை அடிவாரத்தில் ஒரு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. அது, எஸ்தரின் எலும்புகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
அதனை உறுதி படுத்த, 74 வயதாகும் எஸ்தரின் தாய் Ria Bryant-ன் உடலிலிருந்து DNA மாதிரி எடுக்கப்பட்டு, கிடைக்கப்பெற்ற எலும்புகளில் இருந்து எடுக்கப்பட்ட DNA மாதிரிகளை சோதனைக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று அது எஸ்தர் தான் என்று ஆய்வாளர்களால் உறுதிசெய்யப்பட்டது.
எஸ்தர் மலையிலிருந்து தவறி விழுந்து இறந்து இருக்கலாம், பின்னர் அவரது உடல் பாகங்களை பிரவுன் கரடிகள் மற்றும் ஓநாய்கள் எடுத்துச்சென்று, எலும்புகளை அங்கங்கு போட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.
எஸ்தர் டிங்களே கடைசியாக நவம்பர் 22-ஆம் திகதி Daniel Colegate-க்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். அதில் "பிரான்சின் அழகில் மூழ்கிவிடுவேன் என நினைக்கிறேன். வெனாஸ்குவில் தஞ்சம் அடைய ஒரு குளிர்கால அறை கிடைக்கும் என நம்புகிறேன். எப்போது முடியுமோ அப்பொழுதெல்லாம் பதிவை இடுகிறேன். லவ் யூ XXX” என பதிவிட்டிருந்தார்.
அவரது மரணம் எஸ்தரின் குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் ஐரோப்பாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்று கூறலாம்.