கால்பந்து மைதானத்தில் பலியானோர் எண்ணிக்கை 174 ஆக உயர்வு! பெரும் பரபரப்பில் இந்தோனேசியா
மைதானத்திற்குள் 34 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களில் இருவர் காவலர்கள் ஆவர்
38 ஆயிரம் பேர் அமரும் மைதானத்தில் 42 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது தவறு என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய நாடான இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் நேற்று நடந்த கால்பந்து போட்டியில், அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது.
இதனால் கடும் கோபமடைந்த அரேமா அணியின் தீவிர ரசிகர்கள் ஆடுகளத்திற்கு சென்று தாக்க தொடங்கினர். இது வன்முறையாக வெடித்தது.
BREAKING: More than 100 people died after a riot broke out at an Liga 1 football match between Arema and Persebaya at Kanjuruhan Stadium in Malang, Indonesia pic.twitter.com/YsDWQfbkRZ
— Insider Paper (@TheInsiderPaper) October 1, 2022
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் 180 பேர் காயமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக மோசமான மைதான பேரழிவுகளில் ஒன்றாக தோன்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Photo: AFP
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 300 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Photo: AP