இளம் இந்திய கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்! அதிர்ச்சியில் சக வீரர்கள்
இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியில் விளையாடி முன்னாள் வீரரும், சௌராஷ்டிரா அணி பேட்ஸ்மேனுமான Avi Barot, 29 வயதில் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் (SCA) வெளியிட்ட அறிக்கையில், அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஹரியானா மற்றும் குஜராத் அணிக்காக விளையாடிய Avi Barot வெள்ளிக்கிழமை மரணமடைந்தார். SCA-வில் உள்ள வீரர்கள் உட்பட அனைவரும் Avi Barot மறைவால் அதிர்ச்சியும், மிகுந்த சோகமும் அடைந்துள்ளனர்.
அக்டோபர் 15ம் திகதி மாலை மாரடைப்பால் Avi Barot உயிரிபிரிந்தது என சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் (SCA) தெரிவித்துள்ளது.
வலது கை பேட்ஸ்மேனான Avi Barot, 38 முதல் தர போட்டிகள், 38 List A போட்டிகள் மற்றும் 20 உள்நாட்டு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான Avi Barot, முதல் போட்டிகளில் 1,547 ரன்களும், List A-வில் 1030 ரன்கள் மற்றும் உள்நாட்டு டி20 போட்டிகளில் 717 ரன்கள் அடித்துள்ளார்.
ரஞ்சி கோப்பை வென்ற சௌராஷ்டிரா அணியில் Avi Barot இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Avi Barot, சௌராஷ்டிரா அணிக்காக 21 ரஞ்சி கோப்பை போட்டிகள், 17 List A போட்டிகள் மற்றும் 11 உள்நாட்டு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
Avi Barot, 2011 ஆம் ஆண்டில் பிசிசிஐ-யின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.