பிரான்ஸுக்கு தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடு விதிப்பதற்கு இது தான் காரணம்! உண்மையை உடைத்த பிரித்தானியா
பிரான்ஸை தொடர்ந்து அம்பர் பிளஸ் பட்டியலில் வைத்திருப்பதற்கான காரணத்தை பிரித்தானியா போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் வெளிப்படுத்தியுள்ளார்.
பீட்டா மாறுபாடு பரவல் காரணமாக பிரான்ஸை அம்பர் பிளஸ் பட்டியலில் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டது. குறிப்பாக பிரான்சின் ரீயூனியன் தீவில் பீட்டா மாறுபாடு தொற்றுகள் பதிவாகியுள்ளன.
ரீயூனியன் தீவு, பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலிருந்து 6,000 மைல் தொலைவில் உள்ள இந்தியப் பெருங்கடலில் உள்ளது.
ரீயூனியன் தீவில் மட்டுமின்றி வடக்கு பிரான்சிலும் பீட்டா மாறுபாடு பிரச்சினையாக உள்ளது.
எங்கள் தடுப்பூசி திட்டத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய கொரோனா மாறுபாட்டை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கமாட்டோம் என கிராண்ட் ஷாப்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.