உக்ரைனுக்கு திடீரென ஜேர்மனி பாதுகாப்பு அமைச்சர் பயணம்! வெளியான காரணம்
ரஷ்யாவுக்கு எதிராக போரிட இராணுவ உதவியை அதிகரிப்பதாக லாம்ப்ரெக்ட் உறுதியளித்தார்
உக்ரைனுக்கு வேறு எந்த நாடுகளும் தற்போது இதுபோன்ற வாகனங்களை வழங்கவில்லை என பெருமிதமாக கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் கூறினார்
ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட், உக்ரைனின் துறைமுக நகரமான ஒடேசாவிற்கு முன் அறிவிப்பின்றி பயணம் செய்தார்.
ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக, உக்ரேனியர்களுக்கு உதவுவதற்காக ஜேர்மனி இதுவரை 719 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கியுள்ளது.
இந்த நிலையில் உக்ரைனுக்கு முன் அறிவிப்பு ஏதுமின்றி பயணம் மேற்கொண்ட ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட், ஜேர்மன் வழங்கிய ஜெபர்ட் Antiaircraft Tank-ஐ ஆய்வு செய்தார்.
Twitter / BMVg_Bundeswehr
அதன் பின்னர் பேசிய அவர், 'இந்த ஆயுதம் முக்கியமான உள்கட்டமைப்பட்டு பாதுகாக்கவும், ரஷ்ய வான் தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாக்க உதவும்' என தெரிவித்தார்.
மேலும் பேசிய கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் கூறுகையில், 'வேறு எந்த நாடுகளும் தற்போது இதுபோன்ற வாகனங்களை வழங்கவில்லை. ஜேர்மனி ஒருதலைப்பட்சமாக அவ்வாறு செய்யாது. ஜேர்மனி தனது கூட்டாளர்களுடன் இதுபோன்ற முக்கிய முடிவுகளில் ஒன்றிணையும்' என்று கூறினார்.
ரஷ்யாவின் உத்வேகத்தை கவனமாகப் பார்க்கும்போது மால்டோவாவிற்கு இராணுவ உதவியை அதிகரிப்பதாக உறுதியளித்த கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட், ஆதரவு விவரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் தெரிவிப்பதாக கூறினார்.