ஆகஸ்டு 1 முதல் ஜேர்மனிக்கு திரும்பும் தடுப்பூசி பெறாத அனைவருக்கும் புதிய கட்டுப்பாடு
ஆகஸ்டு மாதம் 1ஆம் திகதி முதல், ஜேர்மனிக்கு திரும்பும் கொரோனா தடுப்பூசி பெறாத அனைத்து பயணிகளுக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை என்னும் புதிய கட்டுப்பாடு ஒன்றை விதிக்க ஜேர்மன் சுகாதாரத்துறை திட்டமிட்டுவருகிறது.
அவர்கள் எப்படிப்பட்ட அபாய நாடுகளிலிருந்து வருகிறார்கள் என்றெல்லாம் பார்க்காமல், தடுப்பூசி பெறவில்லை என்ற ஒரே காரணியை மட்டுமே கவனத்தில் கொண்டு இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.
இதுவரை, விமானம் வாயிலாக ஜேர்மனிக்கு வருவோருக்கு மட்டுமே கட்டாய கொரோனா பரிசோதனை என்னும் கட்டுப்பாடு இருந்தது.
புதிய விதிகளின்படி, கார் அல்லது ரயில் என எந்த மார்க்கமாக ஜேர்மனிக்குள் நுழைந்தாலும் கட்டாய கொரோனா பரிசோதனை உண்டு.
முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள், அதாவது இரண்டு டோஸ் தடுப்பூசியும் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த கட்டுப்பாடுகளிலிருந்து விதிவிலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.