மைதானத்தில் பரிசு வழங்கி இலங்கை வீரரின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக ஆக்கிய ஹர்திக் பாண்டியா! வைரல் வீடியோ
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தனக்கு பரிசளிக்கும் நெகிழ வைக்கும் காட்சியை இலங்கை வீரர் சமிகா கருணாரத்ன தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொரை 2-1 என கைப்பற்றியது.
இதனையடுத்து, நேற்று கொழும்பில் நடந்த முதல் ஒரு டி-20 போட்டியிலும் வென்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.
முதல் டி-20 போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இரு அணி வீரர்களும் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதன்போது, இந்திய அதிரடி மன்னன் ஹ்ர்திக் பாண்டியா தனது துடுப்பை இலங்கை வீரர் சமிகா கருணாரத்னாவுக்கு பரிசாக அளித்து வாழ்த்து தெரிவித்தார்.
துடுப்பை பெற்றுக்கொண்ட சமிகா மகிழ்ச்சியில் திகைத்தார்.
குறித்து வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சமிகா, எனது முன்மாதிரியிடமிருந்து துடுப்பை பெற்றது கௌரமாக இருக்கிறது.
ஹர்திக் பாண்டியா உங்கள் துடுப்பை எனக்குக் கொடுத்ததற்கு மிக்க நன்றி, நீங்கள் அற்புதமான மனிதர், இந்த நாளை ஒருபோதும் நான் மறக்க மாட்டேன் என சமிகா நெகிழந்துள்ளார்.