நான் செய்த இந்த தவறு... போட்டியையே மாற்றிவிட்டது! தோல்விக்கு பின் ரோகித் சர்மா சொன்ன காரணம்
பெங்களூரு அணிக்கெதிரான தோல்வி குறித்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித்சர்மா பேசியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா? பெறாதா? என்ற நிலைக்கு வந்துள்ளது.
ஏனெனில் நேற்று நடைபெற்று முடிந்த பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம், மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. 10 போட்டிகள் விளையாடியுள்ள மும்பை அணி 4-வெற்றியுடன் உள்ளது.
அடுத்து வரும் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே மும்பை அணி பிளே ஆப் சுற்றை நினைத்து பார்க்க முடியும்.
இந்நிலையில், நேற்றைய போட்டி தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித்சர்மா கூறுகையில், பெங்களூரு அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, அவர்கள் 180 ஓட்டங்களை எட்டிவிடுவார்கள் என்று நினைத்தேன்.
ஆனால், வீரர்களின் அற்புதமான பந்து வீச்சின் மூலம், அதை குறைத்தனர். எங்கள் அணியில் தொடர்ந்து பேட்டிங் பிரச்சனை இருந்து வருகிறது.
பேட்டிங்கை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். நான் முக்கியமான நேரத்தில் ஒரு மோசமான ஷாட்டை ஆடிவிட்டேன், இது விளையாட்டை மாற்றிவிட்ட தருணமாக உணர்ந்தேன். இனி நாம் எந்த ஒரு சூழ்நிலையில் இருந்தாலும், அதில் இருந்து எப்படி வெளியில் வரவேண்டும் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
இஷான் கிஷான் ஒரு திறமனையான வீரர். அவருக்குத் தேவையான சுதந்திரத்தை நாம் கொடுக்க வேண்டும், அதை புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டு அவருக்கு ஐபிஎல் ஒரு சிறந்த தொடராக இருந்தது. இதன் காரணமாகவே அவருக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பினோம்.
இதன் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வார். இது ஒரு சர்வதேச கிரிக்கெட்டிற்கான வழி என்று கூறினார்.