3வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கிய பிரபல நாடு! ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி
60 வயது மேற்பட்டவர்களுக்கு எதிர்ப்புசக்தி அதிகரிக்க 3வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணியை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.
61 வயதாகும் ஜனாதிபதி Isaac Herzog இன்று டெல் அவிவில் உள்ள ஷெபா மருத்துவ மையத்தில் Pfizer தடுப்பூசியின் மூன்றாவது டோஸை போட்டுக்கொண்டார்.
மேலும், நாட்டில் உள்ள 60 வயது மேற்பட்டவர்களுக்கு 3வது டோஸ் போடும் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
அதாவது, ஐந்து மாதங்களுக்கு முன் Pfizer தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்கும் 3வது டோஸை போட்டுக்கொள்ளலாம்.
டெல்டா மாறுபாடு பரவலை தடுக்க 3வது டோஸ் தடுப்பூசி போடும் பிரச்சாரம் தொடங்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சாரத்தை தொடங்குவதில் பெருமைப்படுவதாக கூறிய Isaac Herzog, கொரோனா பிடியிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இது மிகவும் முக்கியமானது என குறிப்பிட்டார்.
ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நம்மால் கொரோனாவை வீழ்த்த முடியும் என Isaac Herzog தெரிவித்துள்ளார்.