மனைவியின் சகோதரியான மச்சினியை சீரழித்து கொலை செய்த கணவன்! வெளிவந்த தலைசுற்றவைக்கும் பகீர் பின்னணி
இந்தியாவில் தனது மனைவியின் சகோதரியான மச்சினியை சீரழித்து கொலை செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆலப்புழாவை சேர்ந்தவர் ரத்தீஷ் என்கிற உன்னி (40). இவர் மனைவி நீத்து. நீத்து மற்றும் அவர் சகோதரி ஹரிகிருஷ்ணா (25) ஆகிய இருவரும் வெவ்வேறு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிலையில் ரத்தீஷுக்கும், ஹரிகிருஷ்ணாவுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையில் வேறு ஒரு நபரை காதலித்த ஹரிகிருஷ்ணா அவரையே திருமணம் செய்ய முடிவு செய்தார்.
இந்த விடயம் ரத்தீஷுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று நீத்து இரவு பணியில் இருந்த நிலையில் ஹரிகிருஷ்ணாவை தனது வீட்டுக்கு ரத்தீஷ் அழைத்து வந்தார். அங்கு இருவருக்கும் இது தொடர்பாக சண்டை ஏற்பட்டது.
அப்போது ஹரிகிருஷ்ணாவை சீரழித்த ரத்தீஷ் பின்னர் அவரை கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். பின்னர் இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து ஹரிகிருஷ்ணாவின் சடலத்தை கைப்பற்றினார்கள்.
பிரேத பரிசோதனையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதனிடையில் தலைமறைவாக இருந்த ரத்தீஷை பொலிசார் கைது செய்துள்ளனர்.