பால்மோரல் கோட்டையை ராணியின் பொது நினைவிடமாக மாற்ற விரும்பும் மன்னர் சார்லஸ்!
சார்லஸ் அரச குடியிருப்புகளை பொதுமக்களுக்கு அணுகக்கூடியதாக மாற்ற விரும்புகிறார்.
மன்னரின் திட்டங்களின்படி, அவர் அங்கு தங்கியிருக்கும் போது பொதுமக்கள் ஸ்காட்டிஷ் இல்லத்திற்குச் செல்லலாம்.
மன்னர் மூன்றாம் சார்லஸ் பால்மோரலை ராணி இரண்டாம் எலிசபெத்தின் பொது நினைவிடமாக மாற்ற விரும்புவதாகவும், அதனை ஆண்டு முழுவதும் பார்வையாளர்களுக்கு திறந்துவைக்க திட்டமிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8-ஆம் திகதி இறப்பதற்கு முன் தனது இறுதி நாட்களைக அவர் ஸ்காட்லாந்தில் உள்ள தனது பால்மோரால் விடுமுறை இல்லத்தில் தான் கழித்தார்.
மறைந்த ராணியின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் நிரந்தர இடத்துடன் கூடிய கண்காட்சிகள் இந்த பால்மோரல் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
உண்மையில் புதிய திட்டங்களின் கீழ், மன்னர் சார்லஸ் அங்கு தங்கியிருக்கும் போது பொதுமக்களை பார்வையிட அனுமதிப்பார் என்று டெலிகிராப் தெரிவித்துள்ளது.
அதேசமயம், மன்னர் சார்லஸ் பால்மோரலை தனது முக்கிய ஸ்காட்டிஷ் வசிப்பிடமாகப் பயன்படுத்த மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்திய ஆண்டுகளில், பல்மோரல் எஸ்டேட் ராணியின் விருப்பமான குடியிருப்பு என்று கருதப்படுகிறதும்.
பார்வையாளர்கள் மைதானம் மற்றும் தோட்டங்களுக்குச் செல்ல முடியும், அங்கு அவர்கள் இந்த சிறப்பு இடத்தின் அழகையும் அமைதியையும் அனுபவிக்க முடியும் மற்றும் ராணிக்கு தங்கள் மரியாதை செலுத்தலாம் என்று நம்பப்படுகிறது.