லண்டனில் பட்டப் பகலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த நிலை! இரும்பு சங்கிலியால் கழுத்தை நெருக்கிய பயங்கரம்
லண்டன் பூங்காவில் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை இரும்பு சங்கிலியால் மர்ம நபர் கழுத்தை நெரித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் கிழக்கு லண்டனில் உள்ள Hornchurch Country பூங்காவில் இருக்கும் பள்ளத்தாக்கு பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த மாதம் 10-ஆம் திகதி வெள்ளிக் கிழமை பிற்பகல் 11.30 மணிக்கு தனியா அமர்ந்தபடி இருந்துள்ளார்.
அப்போது இவர் பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர், திடீரென்று இரும்பு கம்பியை, அவரது கழுத்தில் வைத்து, நெரிந்துள்ளார். இதில் உயிர் பிழைக்க போராடிய அந்த பெண், அவனை தாக்கி அதன் பின் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து இது குறித்து அந்த பெண் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தால், பொலிசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை அந்த நபர் கைது செய்யப்படாத நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், இது தனியாக இருந்த பெண் மீது நடந்த பயங்கரமான தாக்குதல். இப்பகுதியில் இருக்கும் சமூகத்தினரிடையே இந்த சம்பவம் கவலையையும், ஒரு வித பயத்தையும் ஏற்படுத்தும் என்பது தெரியும்.
இந்த சம்பவத்திற்கு பின்பு, அப்பகுதியில் பொலிசார் திவீர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோசமான செயலில் ஈடுபட்ட அந்த நபரை கண்டுடிக்க நாங்கள் அனைத்தையும் செய்து வருகிறோம், உங்களுக்கு உறுதியளிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
பெருநகர காவல்துறை செய்தித் தொடர்பாளர், பொலிசார் சந்தேகிக்கும் நபர் ஒரு கருப்பு மனிதர் ஆவர். அவர் கருப்பு நிறத்திலும், அவரது தலைமுடிகள் கருப்பு நிறத்திலும் இருந்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், பொலிசார் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக நம்பப்படும் நபரின் புகைப்படத்தை வெளியிட்டு, மக்களின் உதவியை கேட்டுள்ளனர். தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், விபரம் போன்றவற்றை பொலிசார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.