என் குழந்தைகளை பசியாற்றவேண்டுமா அல்லது கொல்ல வேண்டுமா? பிரதமரையும், அரசையும் கிழித்து தொங்கவிட்ட பெண்! வெளியான வீடியோ
பாகிஸ்தானில் பெண் ஒருவர் நாட்டின் பொருளாதார நெருக்கடியை சுட்டிக்காட்டி பிரதமரை விளாசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில், நாட்டில் மருந்துகள், மளிகைப் பொருட்கள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் விலைகள், குறிப்பாக கராச்சி நகரில் அதிகரித்து வருவதை விவரித்து, பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் PML-N தலைவர் மரியம் நவாஸ் ஆகியோரைக் குறை கூறும் பாகிஸ்தானிய பெண் ஒருவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
பாகிஸ்தான் ஒரு முடங்கும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது மற்றும் ஆழமாகி வரும் அரசியல் கொந்தளிப்பு கடுமையான முடிவுகளை எடுக்கும் அரசாங்கத்தின் திறன் குறித்த சந்தேகங்களை உருவாக்குகிறது. பாக்கிஸ்தான் குடிமக்கள் நாட்டின் பிரதமர் மற்றும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் கராச்சி பெண் ஒருவர் அரசாங்கத்தை கடுமையாக சாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தன் குழந்தைகளின் பசிக்கு உணவளிக்காமல், அவர்களை கொலை செய்து விடட்டுமா என்று அந்தப் பெண் அரசாங்கத்திடம் கேட்டுள்ளார்.
இந்த வீடியோவை பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஹமீத் மிர் பகிர்ந்துள்ளார்.
கராச்சியைச் சேர்ந்த ரபியா என அடையாளம் காணப்பட்ட பெண், பணவீக்க உயர்வுக்குப் பிறகு தான் எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சினைகளைப் பற்றி அழுது புலம்புவதைக் காணலாம்.
کراچی سے تعلق رکھنے والی ایک ماں نے حکمرانوں کو اپنا بجلی کا بل اور کچن کے لئے اشیاء کی خریداری کا بل دکھا کر کچھ سوال پوچھے میں نے یہ سوال مفتاح اسماعیل کو بھیج دئیے مفتاح صاحب نے جواب بھجوا دیا ہے لیکن پہلے ایک ماں کا دکھڑا سن لیں pic.twitter.com/THahmjAjUL
— Hamid Mir (@HamidMirPAK) August 9, 2022
அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்துக்குப் பிறகு எப்படிச் செலவுகளை நிர்வகிப்பது என்பதை ஆட்சியாளர்கள் சொல்ல வேண்டும் என்றார்.
"நான் என்ன செய்ய வேண்டும், வீட்டு வாடகை, அதிக மின்சாரக் கட்டணம், என் குழந்தைகளுக்கு பால் மற்றும் மருந்து வாங்குதல், என் குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டுமா அல்லது நான் அவர்களைக் கொல்ல வேண்டுமா?" என்று வீடியோவில் அவர் கேட்டார்.
இரண்டு குழந்தைகளைக் கொண்ட ராபியா, கடந்த நான்கு மாதங்களாக சிகிச்சைக்கான மருந்துகளின் விலை உயர்ந்துள்ள நிலையில், தனது ஒரு குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று கூறினார்.
அவரது காணொளிக்கு பதிலளித்த நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில், ஜூன் மாதத்தில் அரசாங்கம் மின் கட்டணத்தை அதிகரிக்கவில்லை அல்லது மருந்துகளுக்கு புதிய வரிகளை விதிக்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.