லண்டனில் இரவில் 15 வயது சிறுமியை தரதரவென இழுத்து சென்று சீரழித்த நபர்! சிசிடிவியில் பதிவான காட்சிகள்... முக்கிய தகவல்
லண்டனில் இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்ற 15 வயது சிறுமியை தரதரவென அழுத்து சென்று வன்கொடுமை செய்த நபர் தொடர்பிலான அதிமுக்கிய தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
லண்டனின் Stratfordல் தான் இச்சம்பவம் கடந்த 4ஆம் திகதி இரவு 9.30 மணியிருந்து 10.30 மணிக்குள் நடந்துள்ளது.
அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 15 வயது சிறுமியை பின் தொடர்ந்து ஒரு ஆண் வந்தான். பின்னர் சிறுமி மீது கை வைத்து கீழே தள்ளி தரதரவென நடைபாதைக்கு இழுத்து சென்றான்.
இதன்பிறகு அங்கிருந்த பெஞ்ச் பின்புறம் வைத்து சிறுமியை சீரழித்துள்ளான். இந்த சம்பவங்கள் சிசிடிவியில் பதிவான நிலையில் அது தொடர்பிலான சிசிடிவி புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது அவ்வழியாக சென்றவர்களின் புகைப்படங்களே வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ள நபர்களில் நீங்கள் ஒருவராக இருந்தாலோ அல்லது அதில் இருப்பவர்களை அடையாளம் கண்டாலோ உடனே தங்களிடம் தெரிவிக்கும்படி பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அப்படி கூறும் பட்சத்தில் விசாரணைக்கு அது பெரியளவில் உதவும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.