ஹரியும், மேகனும் அரச குடும்பத்தை விட்டு வெளியேற்றப்படுவதாக கவலை.., மதிப்பு இவ்வளவு தான்: நிபுணர்கள் கருத்து
இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் 'அரச குடும்பத்தை விட்டு வெளியேற்றப்படுகிறோம் என்று கவலைப்படலாம்' - நிபுணர்.
அவர்கள் இப்போது இளவரசர் ஆண்ட்ரூவுக்கு அருகில், க்ளூசெஸ்டரின் இளவரசர் மற்றும் இளவரசிக்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர்.
இளவரசர் ஹரி மாற்றும் மேகன் மார்க்கல் இந்த வாரம் அதிகாரப்பூர்வ அரச வலைத்தளத்தில் அரச குடும்ப உறுப்பினர் பட்டியலில் கீழே தரமிறக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி, அரசு குடும்பத்திற்கு பல அவமானங்களை ஏற்படுத்திய இளவரசர் ஆண்ட்ரூவுக்கு சற்று மேல் இருவரும் இடமளிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், தாங்கள் அரச குடும்பத்தை விட்டு வெளியேறிவிட்டதாக ஹரி மற்றும் மேகன் கவலைப்படக்கூடும் என்று அரச வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.
வலைதளத்தின் இப்போதைய பக்கம்
சசெக்ஸின் இளவரசர்-இளவரசியான இந்த ஜோடி முன்பு அரச சுயவிவரங்களின் பக்கத்தில் குடும்ப உறுப்பினர்கள் பட்டியலில், மூத்த அரச குடும்பங்களுக்கு கீழே மற்றும் குடும்பத்தின் சிறிய உறுப்பினர்களுக்கு மேல் என இடையில் இடம் பெற்றிருந்தனர்.
குறிப்பிட்டு சொல்லப்போனால், ஹரியும் மேகனும் முன்பு வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட்டுக்கு கீழே இருந்தனர்.
ஆனால் ராணியின் மரணத்தைத் தொடர்ந்து அரச குடும்பத்தின் அதிகாரப்போர்வை வலைதள பக்கம் புதுப்பிக்கப்பட்டது,மேலும் மேகனும் ஹரியும் தரவரிசையில் க்ளோசெஸ்டரின் இளவரசி அலெக்ஸாண்ட்ரா மற்றும் இளவரசருக்கு கீழே தள்ளப்பட்டனர்.
வலைதள பக்கம் முன்னதாக
குடும்பத்தை விட்டு வெளியேறிவிட்டதாக ஹரி-மேகன் கவலைப்படக்கூடும்
ராயல் வாழ்க்கை வரலாற்றாசிரியர் பில் டாம்பியர் தி சன் ஆன்லைனிடம் கூறுகையில், "ஹரியும் மேகனும் அரச குடும்பத்திலிருந்து மெதுவாக வெளியேறுகிறார்கள் என்று கவலைப்பட வேண்டும்.
ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டுக்கு இளவரசர் மற்றும் இளவரசி பட்டங்களை வழங்கலாமா என்பதில் மன்னர் சார்லஸ் தயங்குவதாகத் தெரிகிறது.
அரண்மனை இணையதளத்தில் அவர்கள் 'தரமிழக்கப்பட்டது' என்பது அவர்கள் வேலை செய்யும் அரச குடும்பங்களாகக் காணப்படவில்லை என்பதற்கான மற்றொரு குறிகாட்டியாகும்.
வலைத்தள பக்கத்தின் மாற்றங்கள் இப்போது அரச குடும்பத்தில் உள்ள பாத்திரங்களை வாரிசு வரிசைக்கு எதிராக பிரதிபலிக்கின்றன என்பது புரிந்து கொள்ளப்படுகிறது."என்று கூறினார்.
ஆர்ச்சி மற்றும் லிலிபெட்
அரச குடும்பத்தின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஏஞ்சலா லெவின் கூறுகையில், இந்த மாற்றம் ஹரியும் மேகனும் அரச குடும்பத்தில் எப்படி மதிக்கப்படுகிறது என்பதையும் காட்டுகிறது.
தங்களின் இரண்டு குழந்தைகளுக்கு இளவரசர் மற்றும் இளவரசி என்ற பட்டங்கள் வழங்கப்படுமா என்று தம்பதியினர் இன்னும் காத்திருக்கின்றனர்.
ராணியின் மரணத்தைத் தொடர்ந்து, ஆர்ச்சி மற்றும் லிலிபெட் இளவரசர் மற்றும் இளவரசி மற்றும் மன்னரின் பேரக்குழந்தைகள் என்ற HRH பட்டங்களுக்கு உரிமை உண்டு.
ஆனால் வில்லியம் மற்றும் கேட்டின் பட்டங்கள் வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசி என்று புதுப்பிக்கப்பட்ட போதிலும், ஆர்ச்சி மற்றும் லிலிபெட் இன்னும் மாறவில்லை.
பக்கிங்ஹாம் அரண்மனை செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில், "இணையதளத்தில் நேரலையில் புதுப்பித்தல் சரியாக வேலை செய்யாது. எங்களுக்குத் தகவல் கிடைத்தவுடன் இணையதளத்தைப் புதுப்பிப்பதன் மூலம் நாங்கள் பணியாற்றுவோம்' என்று கூறியுள்ளார்.