ரஹானே அவுட்... ரோகித் இன்! தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் குறித்து வெளியான தகவல்
இந்திய அணி வீரரான அஜின்கியா ரஹானேவை, தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட்டில் துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து அணியுடன், தற்போது விளையாடி வரும் இந்திய அணி, இந்த தொடர்கள் முடிந்த பின்பு, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று தொடர்களில் விளையாடவிருந்தது.
ஆனால், தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இந்தியா அங்கு சென்று கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்காது என்று முதலில் கூறப்பட்டது.
அதன் பின் பிசிசிஐ தலைவர் கங்குலி, இந்தியா நிச்சயம் தென்னாப்பிரிக்க தொடரில் பங்கேற்கும் என்று தெரிவித்தார். குறிப்பாக 17-ஆம் திகதி டிசம்பர் மாதம் துவங்கவிருந்த போட்டி 26-ஆம் திகதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இதற்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் ரோகித் மீண்டும் அணிக்கு திரும்புவதால், துணைக் கேப்டன் பதவியிலிருந்து ரஹானேவை நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக துணைக் கேப்டன் பதவியை ரோகித்திற்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.
மேலும், தற்போது ரஹானேவின் பார்ம் கேள்விகுறியாக உள்ளதால், இந்த தொடரில் ரஹானே நிறுத்தப்பட்டு ஸ்ரேயஸ் அய்யருக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.