இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை நீங்க தான் ஏத்துக்கனும்! மிக பெரிய வாய்ப்பை நிராகரித்த ஜாம்பவான்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக டிராவிட்டை நியமிக்க பிசிசிஐ விருப்பப்பட்டும் அதை அவர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே விலகியதை அடுத்து கடந்த பல ஆண்டுகளாகவே ரவி சாஸ்திரி இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
அவரது தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு பல தொடர்களை கைப்பற்றி இருந்தாலும் ஐசிசி கோப்பையை வெல்ல வில்லை என்ற குறை மட்டுமே அவரின் மீதும், கேப்டன் விராட் கோலியின் மீதும் உள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ரவி சாஸ்திரி தனது பதவியில் இருந்து விலக உள்ளார். இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகமான பிசிசிஐ தற்போது புதிய பயிற்சியாளரை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
அதன்படி வெளிநாட்டு பயிற்சியாளர்களை விரும்பாத பிசிசிஐ தலைவர் கங்குலி நிச்சயம் இந்திய அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர்களில் ஒருவரே பயிற்சியாளராக வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இந்திய அண்டர் 19 அணியையும், இந்திய ஏ அணியையும் பயிற்றுவித்த ராகுல் டிராவிட்டுக்கு இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளராக பொறுப்பேற்க பிசிசிஐ தலைமையில் இருந்து அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் டிராவிட் அந்த வாய்ப்பினை தேவையில்லை என்றும் நான் பயிற்சியாளராக செயல்பட விரும்பவில்லை என்றும் அந்த பதவியை மறுத்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் டிராவிட் ஏன் இந்த பதவியை ஏற்க மறுத்தார் என்ற தகவல் வெளியாகவில்லை