RCB அணியின் புதிய கேப்டனாக இவர் தான் வருவார்! அடித்து கூறும் ஆகாஷ் சோப்ரா
பெங்களூரு அணிக்கான அடுத்த கேப்டன் யாராக இருப்பார் என்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வெளிப்படையாக கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரோடு, தான் பெங்களூரு அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோஹ்லி அறிவித்தார்.
இதனால் அடுத்து பெங்களூரு அணிக்கான கேப்டன் யார் என்ற விவாதம் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கிறது.
இதற்கிடையில் வீரர்கள் தக்க வைக்கும் பட்டியலில், பெங்களூரு அணி, கோஹ்லி, மேக்ஸ்வேல்ஸ், மொகமது சிராஜ் ஆகியோரை தக்க வைத்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இது குறித்து கூறுகையில், தன்னைப் பொறுத்தவரை பெங்களூரு அணி இந்த ஏலத்தில் ஒரு இளம் வீரரை அதிக தொகை கொடுத்த எடுக்க முடிவு செய்துள்ளதாக தோன்றுகிறது.
ஏனெனில், அந்தணியின் சுழற்பந்து வீச்சாளரான யுவேந்திர சஹாலை கழட்டிவிட்டுள்ளது.
இதனால் அவருக்கு பதிலாக மும்பை அணியில் கலக்கி வந்த ராகுல் சஹாரை எடுக்க போட்டி போடும். அதே போன்று கோஹ்லி தற்போது கேப்டனாக இல்லாததால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த ஜசன் ஹோல்டரை ஏலத்தில் எடுத்து அவரை பெங்களூரு அணி கேப்டனாக நியமிக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.
இவரின் இந்த கணிப்பை பெங்களூரு ரசிகர்கள், பலரும் இருக்கலாம் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.