174 பேர் பலியான சோக சம்பவம்.. கால்பந்து மைதானம் கலவரபூமியானது ஏன்? வெளியான காரணம்
இந்த சம்பவம் இந்தோனேசியாவின் கடைசி கால்பந்து சோகம் என்று நான் நம்புகிறேன் - ஜனாதிபதி ஜோகோ விடோடோ
ரசிகர்கள் காவல்துறையை தாக்க தொடங்கியதால், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவதற்கு முன்பு நாங்கள் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம் - ஜாவா காவல்துறை தலைவர் நிகோ அஃபின்டா
இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் நடந்த வன்முறையில் 174 பேர் பலியான சம்பவம் தொடர்பில் இதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
கிழக்கு ஜாவாவின் மலாங் நகரில் அரேமா எஃப்சி மற்றும் சுரபயா அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடந்தது. இதில் அரேமா அணி 2-3 என தோல்வியடைந்ததால் அந்த அணியின் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர்.
அதன் தொடர்ச்சியாக வீரர்கள் மற்றும் கால்பந்து அதிகாரிகள் மீது போத்தல்கள், பிற பொருட்களை அவர்கள் தூக்கி வீசினார். இவ்வாறு தொடங்கிய சண்டை வன்முறையாக வெடித்ததில் 174 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
AP Photo/Yudha Prabowo
இந்த நிலையில் கால்பந்து மைதானத்தில் வன்முறை வெடித்தது ஏன் என தெரிய வந்துள்ளது. அதாவது, தனது சொந்த மைதானத்தில் அரேமா அணி 23 ஆண்டுகளுக்கு பின் தோல்வியை சந்தித்துள்ளது. இது தான் அந்த அணியின் ரசிகர்களுக்கு ஆத்திரமூட்டியது.
மேலும் ஏன் அரேமா அணி தோல்வியடைந்தது என அணி நிர்வாகம் விளக்க வேண்டும் என ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார். அதேபோல் கால்பந்து மைதானங்களில் கண்ணீர் புகைக்குண்டு வீசுவதற்கு ஃபிபா தடை விதித்துள்ள நிலையில் பொலிஸார் அவற்றை பயன்படுத்தியது கூட்ட நெரிசலுக்கு வித்திட்டதாக தெரிகிறது.
PUTRI/AFP
இந்த சோக சம்பவத்தின் விளைவாக இந்தோனேசிய கால்பந்து சங்கம் பிரீமியர் கால்பந்து லீக் லிகா 1 தொடரை காலவரையின்றி இடைநிறுத்தியுள்ளது. மேலும் அரேமா அணி எஞ்சிய போட்டிகளை நடத்த தடை செய்யப்பட்டுள்ளது.
PUTRI/AFP