மீண்டும் பள்ளிகளை மூடி ஊரடங்கை அமுல்படுத்திய ஐரோப்பிய நாடு
ஐரோப்பிய நாடான ருமேனியாவில் கொரோனா அதிகரித்து வருவதால், அந்நாட்டு அரசு மீண்டும் இரவு ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளது.
சில மாதங்களாக சற்று குறைந்து வந்த கொரோனா தொற்று, குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகளில் தற்போது மீண்டும் பரவ தொடங்கியுள்ளது.
ருமேனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இரண்டாவது மிகக் குறைந்த தடுப்பூசி விகிதத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ருமேனியாவில் திங்கள்கிழமை முதல் பெரும்பாலான பொது இடங்களுக்கு நுழைவதற்கு சுகாதார பாஸ்களை கட்டாயமாக்கப்படுவதாக அரசு அறிவித்திருக்கிறது.
கொரோனா தொற்றுகள் மற்றும் இறப்புகளின் அதிகரிப்பைத் தடுக்கும் முயற்சியில் பள்ளிகளுக்கு இரண்டு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது.
எனினும், ருமேனியாவில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இரண்டு வாரங்களுக்கு பிறகு குழந்தைகள் பள்ளிக்கு திரும்புவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ருமேனியாவில் இந்த மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா இறப்புகள் மற்றும் தொற்றுநோய்களின் எண்ணிக்கையை பதிவுவாகியுள்ளது.
நாட்டில் உள்ள மொத்தம் 2000 ஐசியூ படுக்கைகளும் நிரம்பியுள்ளதால், நோயாளிகள் படுக்கைக்காக காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
இதனால், மருத்துவமனை அமைப்பு ஆபத்தான நிலையில் இருப்பதாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.