இது பேரழிவை ஏற்படுத்தும்! பிரித்தானியாவுக்கு ரஷ்யா பகிரங்க எச்சிரிக்கை
அதிபர் புடினுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுத்தால் அது பேரழிவை ஏற்படுத்தும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து பிரித்தானியா வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ் ட்ரஸ் கூறியதாவது, தற்போதைக்கு எங்களால் எதையும் நிராகரிக்க முடியாது.
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை கடுமையாக்குவதற்கு நாங்கள் புதிய சட்டத்தை கொண்டு வருவோம், அதனால் ரஷ்யாவில் அதிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை குறிவைக்க முடியும்.
இன்னும் சில நாட்களில் அதனை முன்னெடுப்போம் மற்றும் உக்ரைனுக்கு பிரித்தானியா ஆயுதங்களை வழங்குவதாக லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரித்தானியா அத்தகைய நடவடிக்கை எடுத்தால், அது இரு நாட்டு உறவுகளுக்கு பேரழிவு ஏற்படுத்தும் என ரஷ்யா அரசாங்க செய்தித் தொடர்பாளர் Dmitry Peskov எச்சரித்துள்ளார்.
மேலும், அத்தகைய நடவடிக்கைகள் எந்தவிதத்திலும் புடினை பாதிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.